NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / விநாயகர் சதுர்த்தி 2023: செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விநாயகர் சதுர்த்தி 2023: செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்
    இயற்கையை கெடுக்கும் எதுவும் இறைவனுக்கு புறம்பானது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி 2023: செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 18, 2023
    08:18 am

    செய்தி முன்னோட்டம்

    2023ஆம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது.

    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடியவைகள்:

    இயற்கைக்கு பாதகமில்லாத களிமண் அல்லது இயற்கை பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

    விநாயகர் சிலை/படம் வைக்கும் இடத்தையும் பூஜை அறையையும் காலையிலேயே எழுந்து சுத்தம் செய்ய வேண்டும்.

    நாளை முழுவதும் நல்லதை மட்டுமே நினைத்து நல்லதை மட்டுமே பேச வேண்டும்.

    விநாயகருக்கு பிடித்த மோதகம் செய்து வழிபடுவது அவசியம்.

    வீட்டில் உள்ள அனைவரும் நாளை காலை சீக்கிரமே எழுந்து, குளித்து விட்டு பூஜைக்கு தயாராவது வீட்டை லட்சுமி கடாட்சியத்துடன் வைத்திருக்கும்.

    cnk

    விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடாதவைகள்:

    பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற இயற்கைக்கு பாதகமான பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைக்கக்கூடாது. இயற்கையை கெடுக்கும் எதுவும் இறைவனுக்கு புறம்பானது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

    இயற்கையான பூக்களையும் இலைகளையும் விநாயரை அலங்கரிக்க பயன்படுத்துவது தான் நல்லது.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, குப்பைகளை கண்ட இடத்தில் வீசாமல், குப்பை தொட்டிகளில் வீச வேண்டும். விநாயகர் செல்லும் இடமெல்லாம் கோவில் தான். அதனால், தெருவை குப்பைகூளம் ஆக்குவது கோவிலை குப்பை ஆக்குவதற்கு சமம்.

    பட்டாசுகள் மற்றும் வெடிகளை போடும் போது, அது தெரு விலங்குகளுக்கு பாதகம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். யானை முகத்தானின் நண்பர்களை தொந்தரவு செய்தால் அவனுக்கு கோபம் வந்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விநாயகர் சதுர்த்தி

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா? இந்தியா
    பாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம் விமானப்படை

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  தமிழக அரசு
    பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது  சிவகங்கை
    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது? இந்தியா
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025