NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்பது உண்மையா? எங்கே இருக்கிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்பது உண்மையா? எங்கே இருக்கிறது?
    ராஜ ராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் செழிப்பாக வளர்ந்தது

    ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்பது உண்மையா? எங்கே இருக்கிறது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 05, 2024
    08:58 am

    செய்தி முன்னோட்டம்

    தஞ்சையை ஆண்ட சோழ சக்கரவர்த்தி, அருள்மொழி வர்மன் என்று அழைக்கப்பட்ட ராஜ ராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் செழிப்பாக வளர்ந்தது என வரலாற்று சான்றுகள் உள்ளன.

    அந்த சரித்திர நாயகனின் பிறந்த நாளை ஆண்டு தோறும், தமிழ் மாதமான ஐப்பசியில் (அக்டோபர்-நவம்பர்) சதய நட்சத்திரத்தன்று, சதய விழாவாக கொண்டாடுவது வழக்கம்.

    இது தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள அனைவருக்குமான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. அதோடு தஞ்சை மக்களுக்கு இது ஒரு திருவிழாவாகும்.

    இத்தகைய பெருமை கொண்ட ராஜ ராஜ சோழனின் சமாதி எங்குள்ளது என பல கதைகள் உள்ளது. ராஜராஜனின் மறைவு பற்றியும் பல செய்திகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் ஒரு பார்வை.

    இடம்

    பொன்னியின் செல்வரின் பள்ளிப்படை இருப்பதாக கண்டறிந்தது யார்?

    கும்பகோணத்தில் உள்ள உடையாளூரில் உள்ள ஒரு சிறிய கொட்டகையில் ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதற்குக் காரணம், 2000-களின் முற்பகுதியில், மைசூர் கல்வி நிறுவனத்தில் தமிழ்ச் செப்பேடுகளின் ஆய்வில், அவரது (ராஜ ராஜ சோழன்) பேரன் குலோத்துங்கன் ஆட்சியில் ராஜ ராஜாவின் நினைவிடத்தைப் புதுப்பித்ததைப் பற்றி குறிப்பிட்ட ஒரு கல்வெட்டை உடையாளூரில் கண்டறிந்தனர்.

    இந்த கல்வெட்டு கொண்ட தூண் உடையாளூரில் உள்ள ஒரு அம்மன் கோவிலின் நுழைவாயிலில் கண்டெடுக்கப்பட்டது.

    ராஜ ராஜாவின் 'பள்ளிப்படை' குறிக்கக்கூடிய சிவன் கோவில் அல்லது 'லிங்கம்' என்று ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் தேடினார்கள்.

    அதன்படியே உடையாளூரில் உள்ள ஒட்டத்தோப்பில் பாதி புதையுண்ட 'லிங்கம்' தான் அவரது சமாதியாக இருக்கமுடியும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

    பள்ளிப்படை

    மன்னர்களின் நினைவாக சிவலிங்கம் வைத்து வழிபாடு

    வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, பண்டைய காலங்களில், ஒரு ஆட்சியாளரின் சாம்பலை மண்ணில் புதைத்து, அதன் மேல் ஒரு சிவலிங்கத்தை நிறுவுவதன் மூலம், அந்த இடத்தை பள்ளிப்படை(புதைக்கப்பட்ட இடம்) என குறிக்கும் வழக்கம் இருந்தது.

    பின்னர் அது பிரதிஷ்டை செய்யப்படும்.

    இந்த பாரம்பரியம் மறைந்த ஆட்சியாளர்களை கௌரவிப்பதிலும் நினைவுகூருவதிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    மேலும் இங்கே பெரிய மணிமண்டபம் போல காட்டுவதால், பிரயாணிகள் இளைப்பாறவும் முடியும்.

    ராஜ ராஜ சோழனின் சமாதியாக இது இருக்கும் என்பதற்கு மற்றுமொரு முக்கிய ஆதாரம், இந்த இடம் இடைக்கால சோழர்களின் பண்டைய தலைநகரான பழையாறைக்கு அருகாமையில் உள்ளது.

    மேலும், ராஜ ராஜ சோழனின் மனைவி, பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை, இந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பட்டீஸ்வரத்தில் உள்ளது.

    மரணம்

    அருண்மொழியின் மரணம் குறித்த விவாதங்கள்

    உடையாளூரில் உள்ள பள்ளிப்படை மற்றுமின்றி கைலாசநாதர் கோயில் கூட ராஜராஜனின் பள்ளிப்படையாக இருக்கலாம் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

    இக்கோயிலில் கருவறைக்கு வெளியே சுவரில் சிவபெருமானின் காலடியில் துறவி அமர்ந்திருப்பதைக் காட்டும் தனித்துவமான சிற்பம் உள்ளது.

    இது ராஜ ராஜ சோழன் தான் எனவும் சில கூற்றுகள் உண்டு.

    மர்மம் அவரது சமாதி பற்றியது மட்டுமல்ல. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றியும்!

    இறப்பு

    அருண்மொழியின் இறப்பை சுற்றியுள்ள மர்மங்கள் 

    கிபி 1013 ஆம் ஆண்டின் இறுதியில் திருவிசைநல்லூரில் உள்ள ஒரு சிவன் கோயிலில் ராஜ ராஜாவும், அவரது மனைவி லோகமாதேவியும் 'ஹிரண்ய கர்ப்பம்' மற்றும் 'துலாபார' சடங்குகளை செய்ததாக பதிவு உள்ளது.

    இது துறவறம் மேற்கொள்ளும் முன்னர் செய்யப்படும் சடங்காகும்.

    அதன் பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டு உடையாளூரில் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    மறுபுறம், அவர் தஞ்சை பெரியகோவிலின் கோபுரத்தின் மேல் இருந்து தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.

    எவ்வாறாக இருப்பினும், ராஜ ராஜ சோழன் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதை மறுப்பதற்கில்லை.

    அவரின் சதய விழா வரும் நவம்பர் 10 அன்று தொடங்குகிறது. அந்நாளில் அவரை நினைவுகூருவோம்!

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தஞ்சாவூர்
    தஞ்சை பெரிய கோவில்
    திருவிழா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தஞ்சாவூர்

    'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு  தமிழ்நாடு
    திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது திமுக
    தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு  அறநிலையத்துறை
    தஞ்சாவூர், சேலத்தில், ரூ.60 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் சேலம்

    தஞ்சை பெரிய கோவில்

    தஞ்சாவூரில் ஆருத்ரா தரிசனம் - பெரிய கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை தமிழ்நாடு
    தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தமிழ்நாடு
    சிவராத்திரி விழா முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம் தமிழ்நாடு
    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம்  தமிழ்நாடு

    திருவிழா

    பழநி முருகன் கோயிலில் முடி காணிக்கை செய்தவர்களின் புகைப்படத்துடன் இலவச டிக்கெட்  அறநிலையத்துறை
    வார இறுதி நாட்கள், கோயில் திருவிழாக்கள்-தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்  தமிழ்நாடு
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்  விருதுநகர்
    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 308 வயது திருப்பதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025