டீ பிரியர்களே: ஆரோக்கியமான துளசி சேர்த்து டீ ட்ரை பண்ணியிருக்கீங்களா?
செய்தி முன்னோட்டம்
துளசி மத நம்பிக்கையின்படி ஒரு புனிதமான தாவரமாக அறியப்படுகிறது. எனினும், இது சிறந்த மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகையாகவும் உள்ளது.
இந்தக் கட்டுரை, தினசரி பருகும் டீயில் இந்த ஆரோக்கியமான உட்பொருளை எப்படி சேர்த்துக்கொள்வது எனபதையும், துளசியைப் பயன்படுத்துவதற்கான ஐந்து தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளை பற்றியும் விவரிக்கிறது.
ஒவ்வொரு வழியும் ஒரு தனித்துவமான சுவை அனுபவத்தையும், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
இஞ்சி
துளசி மற்றும் இஞ்சி
உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தரும் தேநீருக்கு, கொதிக்கும் தேநீரில் ஒரு டீஸ்பூன் உலர்ந்த துளசி இலைகள் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சேர்க்கவும்.
ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும், பின்னர் வடிகட்டவும்.
இந்த கலவை செரிமானத்தை ஆதரிப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஏற்றது.
இது உங்கள் நாளைத் தொடங்குவதற்கு அல்லது மதிய வேளையை உற்சாகமாகத் தொடங்குவதற்கு ஒரு சிறந்த வழியாக அமைகிறது.
புதினா
குளிர்விக்கும் புதினா மற்றும் துளசி கலவை
வெப்பமான கோடை நாளில், புத்துணர்ச்சியூட்டும் ஒரு கிளாஸ் புதினா மற்றும் துளசி தேநீரை பேருக்காவது சாலச்சிறந்தது.
புதிய புதினா இலைகள் மற்றும் உலர்ந்த துளசி இலைகளை சம பாகங்களாகப் பயன்படுத்துங்கள்.
பின்னர் அவற்றை கொதிக்கும் நீரில் சேர்த்து ஏழு நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இந்தக் கலவை உங்களை குளிர்விப்பது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மனத் தெளிவை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
டீடாக்ஸ்
எலுமிச்சை துளசி டீடாக்ஸ் டீ
ஒரு கப் கொதிக்கும் நீரில் அரை எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் உலர்ந்த துளசி இலைகளைச் சேர்ப்பதன் மூலம் புத்துணர்ச்சியூட்டும் எலுமிச்சை துளசி தேநீர் தயாரிக்கலாம்.
10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சூடாகவோ அல்லது ஆறவைத்தோ குடிக்கவும்.
இந்த சுவையான தேநீர் நச்சுகளை அகற்ற உதவுகிறது, உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி வழங்குகிறது.
இலவங்கம்
இனிப்பான இலவங்கப்பட்டை துளசி தேநீர்
சர்க்கரை இல்லாமல் இனிப்பு சுவையை அனுபவிக்க, கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் உலர்ந்த துளசி இலைகள் மற்றும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
10 நிமிடங்கள் ஊற விடவும், பின்னர் வடிகட்டவும். இந்த தேநீர், இரத்ததில் சர்க்கரை அளவை சீராக்க உதவுவதற்கும், அமைதி உணர்வைத் தூண்டுவதற்கும் உதவுகிறது.
மாலையில் பருக சிறந்த தேர்வாகிறது இந்த தேநீர்.
பெர்ரி டீ
பெர்ரி பழங்கள், துளசி தேநீர்
ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புப் பானத்தை உருவாக்க, ஒரு கப் கொதிக்கும் நீரில் இரண்டு தேக்கரண்டி உலர்ந்த துளசி இலைகளை சேர்த்து ஸ்ட்ராங்கான துளசி தேநீரை தயாரித்து அதை குளிர்விக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேநீர், எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டிகள் மற்றும் பெர்ரிகளின் கலவையை (ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது ராஸ்பெர்ரி) சேர்க்கவும்.
ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் எனர்ஜியை பெற இந்த புத்துணர்ச்சியூட்டும் குளிர் பானத்தை அனுபவிக்கவும்.