NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்
    சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்
    வாழ்க்கை

    சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்

    எழுதியவர் Venkatalakshmi V
    February 22, 2023 | 08:52 am 1 நிமிட வாசிப்பு
    சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்
    சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று

    இன்று லெண்ட் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் (Ash Wednesday). உலகில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்தின் புனித நாள் இன்று. ஷ்ரோவ் செவ்வாய்க்கு அடுத்த நாளாகவும், தவக்காலத்தின் முதல் நாளாகவும் கொண்டாடப்படும் இந்த சாம்பல் திருநாள், ஈஸ்டருக்கு 40 நாள் முன்னால் வரும். கிறிஸ்மஸ் திருநாள் போலல்லாமல், இந்த சாம்பல் புதன் மற்றும் ஈஸ்டர் ஒரு குறிப்பிட்ட தேதியில் வராது. பாரம்பரியமாக லெண்ட் தவக்காலம் என்பது, ஈஸ்டருக்கு, ஏழு வாரம் முன்(திங்கட்கிழமை) துவங்கி, ஈஸ்டருக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. உலகெங்கிலும் கிறிஸ்தவர்கள் இந்த சாம்பல் புதன்கிழமையன்று, பிரார்த்தனைகள், தொண்டு செயல்கள் மற்றும் துக்கங்களுக்கான நேரமாக கருதுகின்றனர்.

    சாம்பல் புதனின் வரலாறு

    சாம்பல் புதனன்று, பாதிரியார்கள் தேவாலயத்திற்கு வரும் ஒவ்வொரு நபரின் நெற்றியிலும், சாம்பலைத் தடவுவார்கள் பழங்கால ரோமில், சாம்பல் புதன் தொடங்கியதாக கூறப்படுகிறது. அங்கு பாவம் செய்தவர்கள், பொது மன்னிப்பு வேண்டி, சாக்கு உடைகளை அணிந்து, சாம்பலால் தங்களை மூடிக்கொண்டதாக வரலாறு. இந்த 40 நாட்கள் உண்ணாவிரதம்- தவக்காலம் (லெண்ட்), ஈஸ்டருடன் முடிவடையும். ஆரம்பகாலத்தில், கிறிஸ்தவ தேவாலயத்தில், லென்ட் கொண்டாட்டங்கள் நீண்ட நாட்கள் கொண்டாடப்பட்டது எனக்கூறப்படுகிறது. அதாவது, ஈஸ்டருக்கு ஆறு வாரங்களுக்கு(42 நாட்கள்) முன்னதாகவே தொடங்கியது என்றும், அதில், 36 நாட்கள் (ஞாயிறு தவிர) மட்டுமே விரத நாட்களாக கடைபிடிக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது. 7ஆம் நூற்றாண்டில் தான், பாலைவனத்தில் இயேசு கிறிஸ்துவின் விரத நாட்களை பின்பற்றி, தவக்காலத்தின் 40 நாட்கள், நோன்பு நாட்களாக நிறுவப்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலகம்

    உலகம்

    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உக்ரைன்
    அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா அமெரிக்கா
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உக்ரைன்
    கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே கொடுக்க வேண்டும்: அனல் பறக்கும் விவாதம் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023