NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்
    சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று

    சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 22, 2023
    08:52 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று லெண்ட் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் (Ash Wednesday). உலகில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்தின் புனித நாள் இன்று.

    ஷ்ரோவ் செவ்வாய்க்கு அடுத்த நாளாகவும், தவக்காலத்தின் முதல் நாளாகவும் கொண்டாடப்படும் இந்த சாம்பல் திருநாள், ஈஸ்டருக்கு 40 நாள் முன்னால் வரும்.

    கிறிஸ்மஸ் திருநாள் போலல்லாமல், இந்த சாம்பல் புதன் மற்றும் ஈஸ்டர் ஒரு குறிப்பிட்ட தேதியில் வராது.

    பாரம்பரியமாக லெண்ட் தவக்காலம் என்பது, ஈஸ்டருக்கு, ஏழு வாரம் முன்(திங்கட்கிழமை) துவங்கி, ஈஸ்டருக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.

    உலகெங்கிலும் கிறிஸ்தவர்கள் இந்த சாம்பல் புதன்கிழமையன்று, பிரார்த்தனைகள், தொண்டு செயல்கள் மற்றும் துக்கங்களுக்கான நேரமாக கருதுகின்றனர்.

    சாம்பல் புதன்

    சாம்பல் புதனின் வரலாறு

    சாம்பல் புதனன்று, பாதிரியார்கள் தேவாலயத்திற்கு வரும் ஒவ்வொரு நபரின் நெற்றியிலும், சாம்பலைத் தடவுவார்கள்

    பழங்கால ரோமில், சாம்பல் புதன் தொடங்கியதாக கூறப்படுகிறது. அங்கு பாவம் செய்தவர்கள், பொது மன்னிப்பு வேண்டி, சாக்கு உடைகளை அணிந்து, சாம்பலால் தங்களை மூடிக்கொண்டதாக வரலாறு.

    இந்த 40 நாட்கள் உண்ணாவிரதம்- தவக்காலம் (லெண்ட்), ஈஸ்டருடன் முடிவடையும்.

    ஆரம்பகாலத்தில், கிறிஸ்தவ தேவாலயத்தில், லென்ட் கொண்டாட்டங்கள் நீண்ட நாட்கள் கொண்டாடப்பட்டது எனக்கூறப்படுகிறது.

    அதாவது, ஈஸ்டருக்கு ஆறு வாரங்களுக்கு(42 நாட்கள்) முன்னதாகவே தொடங்கியது என்றும், அதில், 36 நாட்கள் (ஞாயிறு தவிர) மட்டுமே விரத நாட்களாக கடைபிடிக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

    7ஆம் நூற்றாண்டில் தான், பாலைவனத்தில் இயேசு கிறிஸ்துவின் விரத நாட்களை பின்பற்றி, தவக்காலத்தின் 40 நாட்கள், நோன்பு நாட்களாக நிறுவப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    உலகம்

    துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு துருக்கி
    1900களின் முற்பகுதியில் நிலவிய சில அபத்தமான டேட்டிங் வழக்கங்கள்! காதலர் தினம்
    நான்காவது பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க இராணுவம் அமெரிக்கா
    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025