NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்
    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்
    1/2
    வாழ்க்கை 1 நிமிட வாசிப்பு

    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 23, 2023
    01:34 pm
    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்
    மூன்று வருடங்கள் பிறகு மகனுடன் இணைந்த தந்தை

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், பல உயிர்கள் மடிய, உலக மக்களின் இதயங்களில் நீடித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சிறிது காலம் அதனுடன் போராடிய பிறகு, அதனுடன் பயணப்பட உலகம் கற்றுக்கொண்டது எனதான் கூற வேண்டும். ஆனால், இன்னமும் ஒரு சில மக்கள் பயத்தின் பிடியில் இருந்து மீளவில்லை என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. வடஇந்தியாவில் உள்ள, குருகிராம் பகுதியைச் சேர்ந்த 'முன்முன் மாஜி' என்ற பெண், கோவிட்-19-ன் பயம் காரணமாக, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, தனது 10 வயது மகனுடன் சிறைவாசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். 2020 இல் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்த பட்டதை தொடர்ந்து, அந்தப்பெண்மணியின் கணவர் வேலைக்கு சென்றுள்ளார்.

    2/2

    கொரோனா பயத்தால், கணவருக்கும் 'No Entry'

    நோய் தொற்றுக்கு பயந்து, அவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை அந்த பெண். இதன் விளைவாக, அந்த நபர் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதிருந்து, அவர், அவர்கள் இருவரையும் வீடியோ அழைப்புகள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. தொடர்ந்து, அவர்களின் வீட்டு வாடகையை செலுத்தி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான பொருட்களை வீட்டின் முன் வைத்து வைத்துள்ளார். ஆனால் வீட்டிற்குள் அனுமதி இல்லை. அடுத்தகட்டமாக, காலியான கேஸ் சிலிண்டரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்ட பிறகு, இண்டக்ஷன் அடுப்பு மூலம் சமையல் செய்துள்ளார் இந்த பெண். தற்போது, கணவரின் கோரிக்கையினை அடுத்த, போலீசார் அந்த பெண்ணையும், குழந்தையையும் மீட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கொரோனா
    வைரல் செய்தி
    இந்தியா

    கொரோனா

    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது அமெரிக்கா
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் தமிழ்நாடு
    உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியா

    வைரல் செய்தி

    உலக அமைதி மற்றும் புரிதல் நாள்: அதன் வரலாற்றையும், முக்கியத்துவத்தை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை உலகம்
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ திண்டுக்கல்
    மோகன்லாலை தொடர்ந்து, பகத் பாசிலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை கேரளா
    உலக தாய்மொழி தினத்தன்று இணையவழி தமிழ் கல்விக்கான புதிய முயற்சியை தொடங்கிய மதன் கார்கி பொழுதுபோக்கு

    இந்தியா

    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம் டெல்லி
    ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல் காங்கிரஸ்
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம் தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023