NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது

    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டியூசிஎஸ் ப்ளாரிஸ் என்னும் நிறுவனத்திற்கு கொரோனா மருந்துகள் தேவைப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனையடுத்து அந்நிறுவனம் சென்னை கீழ்கட்டளையில் செய்யப்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்னும் நிறுவனத்தில் ஒப்பந்தம் ஆன்லைன் மூலம் போட்டுள்ளது.

    இதற்கான கட்டணமாக அந்நிறுவனம் ரூ.6,29,63,325 தொகையை அனுப்பியுள்ளது.

    இந்த தொகையினை பெற்றுக்கொண்ட அந்நிறுவனம் போலி கொரோனா மருந்துகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்கா டியூசிஎஸ் ப்ளாரிஸ் நிறுவனம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

    இந்த புகார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீதிமன்றத்தில் ஆஜர்

    போலி மருந்து சப்ளை செய்த கணவன் மனைவி கைது

    அமெரிக்க நிறுவனமான டியூசிஎஸ் ப்ளாரிஸ் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டனர்.

    போலீஸ் விசாரணையில் சென்னை கீழ்கட்டளையில் செய்யப்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்னும் நிறுவனத்தை ஹரிகரசுப்ரமணியம்(37) மற்றும் அவரது மனைவி காஞ்சனா(25) ஆகியோர் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் அந்த தம்பதியை நேற்று(பிப்.,21) கைது செய்துள்ளார்கள்.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை விசாரித்த நீதிபதி ஹரிகரசுப்பிரமணியத்தை மட்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், அவரது மனைவி காஞ்சனா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    கொரோனா
    சென்னை

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    அமெரிக்கா

    அமெரிக்காவின் மேரிலாந்து மாகாண துணை ஆளுநரான முதல் இந்தியர் உலகம்
    இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா இந்தியா
    உக்ரைன் போருக்கு மீண்டும் நிதி வழங்கும் அமெரிக்கா உலகம்
    சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை உலகம்

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா

    சென்னை

    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சமூக வலைத்தளம்
    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு கோவை
    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம் உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025