Loading...
தண்ணீர் பாட்டிலை பளபளவென சுத்தமாக வைத்திருக்க இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்
தண்ணீர் பாட்டிலை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்

தண்ணீர் பாட்டிலை பளபளவென சுத்தமாக வைத்திருக்க இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2026
03:47 pm

செய்தி முன்னோட்டம்

தண்ணீர் பாட்டிலை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். அதனால் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். பலர் பாட்டில வெளியில் மட்டும் கழுவினால் போதும் என நினைப்பதுண்டு. ஆனால், உள்ளுக்குள் கிருமிகளும் அழுக்குகளும் தங்கியிருக்கும். இந்தக் கட்டுரையில் உங்கள் தண்ணீர் பாட்டிலை உள்ளுக்குள்ளயும் சுத்தமாவும் பாதுகாப்பாவும் வைத்துக்கொள்வதற்கு சில சுலபமான, பயனுள்ள வழிகளைச் சொல்லப்போறோம்.

#1

சுடுநீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்துங்கள்

தண்ணீர் பாட்டிலை உள்ளுக்குள் சுத்தப்படுத்த இதுதான் மிகவும் சுலபமான வழி.

முதலில் பாட்டிலுக்குள் சுடுதண்ணீரை நிரப்பி, கொஞ்சமாக திரவ சோப்பு சேர்த்து நன்றாக குலுக்க வேண்டும்.

இப்படி செய்தால் சோப்பு கரைசல் பாட்டிலின் எல்லா இடங்களுக்கும் போகும்.

அப்புறம் பாட்டிலைக் காலி செய்துவிட்டு, திரும்பவும் சுடுதண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும்.

இதனால் உள்ளே உள்ள அழுக்கும் கிருமிகளும் போய் விடும்.

#2

உப்பு மற்றும் எலுமிச்சை கலவையைப் பயன்படுத்துங்கள்

உங்கள் தண்ணீர் பாட்டிலுக்குள் ஏதாவது கறை அல்லது வாடை இருந்தால், உப்பு, எலுமிச்சை கலவை கண்டிப்பாக உதவும்.

ஒரு ஸ்பூன் உப்பு, அரை எலுமிச்சை சாறு சேர்த்து பாட்டிலுக்குள் போட்டு, அதனுடன் சுடுதண்ணீர் ஊற்றுங்கள்.

சிறிது நேரம் அப்படியே விட்டுட்டு, பின்னர் நன்றாக குலுக்கி காலி செய்துவிடுங்கள்.

இதனால் கறைகளும் துர்நாற்றமும் நீங்கிடும்.

ADVERTISEMENT

#3

பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச் பயன்படுத்துங்கள்

தண்ணீர் பாட்டிலை உள்ளுக்குள்ள சுத்தப்படுத்த பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச் மிகவும் உதவியாக இருக்கும்.

புது ஸ்பாஞ்சோ அல்லது ஏற்கனவே பயன்படுத்திய ஸ்பாஞ்சோ எடுத்து, சோப்புத் தண்ணீரில் நனைத்து பாட்டிலுக்குள் விட்டு, மேலேயும் கீழேயும் நகர்த்துங்கள்.

இதனால் பாட்டிலுக்குள் எல்லா பகுதிகளும் நன்றாக சுத்தமாகும்.

பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள்.

இதனால் பாட்டில் முழுமையும் சுத்தமாகி கிருமிகளும் போய்விடும்.

ADVERTISEMENT

#4

பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள்

பேக்கிங் சோடா ஒரு பயனுள்ள சுத்தம் செய்யும் பொருள். இதை வைத்து தண்ணீர் பாட்டிலை சுத்தப்படுத்தலாம்.

ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை பாட்டிலுக்குள் போட்டு, சுடுதண்ணீர் ஊற்றுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

அப்போதுதான் பேக்கிங் சோடா நன்றாக வேலை செய்யும்.

பின்னர் பாட்டிலை காலி செய்து, குளிர்ந்த தண்ணீரால் நன்றாக கழுவுங்கள்.

இதனால் அழுக்கும், கிருமிகளும் போய்விடும். உங்கள் பாட்டில் புதுசு போல பளபளக்கும்.

#5

தொடர்ந்து சுத்தம் செய்யுங்கள்

தண்ணீர் பாட்டிலை உள்ளும் புறமும் சுத்தமா வைத்துக்கொள்வது ரொம்ப முக்கியம்.

ஒவ்வொரு வாரமும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது பாட்டிலை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.

இதனால் எந்த கிருமிகளும் அழுக்குகளும் சேராது.

இந்த சுலபமான வழிகளைப் பின்பற்றி உங்கள் பாட்டிலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.

இப்படி செய்வதனால் கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம், உங்கள் பாட்டிலும் புதிது போல பளபளவென்று இருக்கும்.

ADVERTISEMENT