NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ

    ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ

    எழுதியவர் Srinath r
    Jan 03, 2024
    10:46 am

    செய்தி முன்னோட்டம்

    புதிய வாகன சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எரிபொருள் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதற்கு மத்தியில், ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்யும் ஸோமாட்டோ ஊழியரின் காணொளி வைரலாகி வருகிறது.

    ஸோமாட்டோ பையை தோளில் அணிந்தபடி, இம்பீரியல் ஹோட்டலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள சஞ்சல்குடாவுக்கு குதிரையில், உணவு விநியோகம் செய்பவர் வருவதைக் அந்த காணொளியில் பார்க்க முடிந்தது.

    ஏன் குதிரையில் வருகிறீர்கள் என்று வழிப்போக்கர்கள் அவரிடம் கேட்டபோது, "பெட்ரோல் இல்லை. மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். நான் ஆர்டரை எடுத்துவிட்டு வெளியேறினேன். ஆனால் பெட்ரோல் கிடைக்கவில்லை" என தெரிவித்தார்.

    எரிபொருள் நிரப்புவதற்காக பலர் ஒரே சமயங்களில் எரிபொருள் மையங்களில் கூடியதால், மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    குதிரையில் பயணிக்கும் ஸோமாட்டோ ஊழியர்

    When petrol bunks ran out of fuel in #Hyderabad, @zomato delivery arrived on horseback ... at Chanchalguda, next to Imperial Hotel... after long, long queues & closure of petrol pumps as a fallout of #TruckersStrike over #NewLaw on hit-and-run accidents @ndtv @ndtvindia pic.twitter.com/bYLT5BuvQh

    — Uma Sudhir (@umasudhir) January 3, 2024

    2nd card

    போராட்டத்தை திரும்பப் பெற்ற லாரி ஓட்டுநர்கள்

    விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றால் லாரி ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் திருத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தை எதிர்த்து, லாரி ஊழியர்கள் ஜனவரி 1ம் தேதி மூன்று நாள் போராட்டத்தை அறிவித்தனர்.

    இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் மையங்களில் கூட தொடங்கினர். இதனால், பெரும்பான்மையான வட மாநிலங்களில் எரிபொருள் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று, மத்திய அரசு உடன் நடந்த பேச்சுவார்த்தையில், சட்டத்தை நிறுத்தி வைக்க அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சோமாட்டோ
    ஹைதராபாத்
    விபத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சோமாட்டோ

    AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ! இந்தியா
    ஸோமாட்டோவுடன் இணைந்து ரயிலில் உணவு டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய ரயில்வே இந்திய ரயில்வே
    ஷிப்ராக்கெட்டை கைப்பற்றும் திட்டம் எதுவும் இல்லை, முதலீட்டாளர்களை எச்சரித்த ஸோமாட்டோ இந்தியா
    "வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில் பங்கு

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா

    விபத்து

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி  உத்தரகாண்ட்
    ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 36 பேர் பலி  ஜம்மு காஷ்மீர்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம் உத்தரகாண்ட்
    உத்தரப்பிரதேச பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து  உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025