NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Feb 23, 2023
    05:29 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா முதுகலை பட்டதாரி ஆவார்.

    இங்குவந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்ககோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பினை சேர்ந்த எனது வளர்ப்பு தாய் சுதா ஷர்மா மாந்திரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கைக்கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் அவர் தன்னை நரபலி கொடுக்கப்போவதாகவும், முன்னதாக தனது சகோதரன் உள்பட 3பேரை நரபலி கொடுத்ததாகவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    இதனைதொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    அறிக்கை தாக்கல்

    தஞ்சமடைந்த பெண்ணின் பெற்றோர் பதிலளிக்க உத்தரவு

    மேலும், ஆன்லைனில் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் விசாரணையும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து மனுதாரர் ஷாலினி தனக்கு பாதுகாப்பு கொடுத்த தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று கூறப்படுகிறது.

    இதன் பின்னர் நீதிபதி, இந்த நூற்றாண்டிலும் மாந்திரீகம், பில்லி, சூனியம் முதலியவற்றை நம்பி நரபலி கொடுக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

    தஞ்சமடைந்த அந்த பெண்ணிற்கும், அவருக்கு உதவிய 2 பேருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு குறித்து ஷாலினி ஷர்மாவின் பெற்றோர் பதிலளிக்க வேண்டும் என்றும், இது குறித்த அறிக்கையினை போபால் காவல் ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    மற்றொரு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரியை 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்ட இந்தியா இந்தியா
    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை ஆய்வு மையம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து இந்தியா
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' வைரல் செய்தி
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 18- பிப்ரவரி 22 வானிலை அறிக்கை
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் விழுப்புரம்
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி நிதியமைச்சர்

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025