Page Loader
நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எழுதியவர் Nivetha P
Feb 23, 2023
05:29 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா முதுகலை பட்டதாரி ஆவார். இங்குவந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்ககோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பினை சேர்ந்த எனது வளர்ப்பு தாய் சுதா ஷர்மா மாந்திரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கைக்கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் தன்னை நரபலி கொடுக்கப்போவதாகவும், முன்னதாக தனது சகோதரன் உள்பட 3பேரை நரபலி கொடுத்ததாகவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அறிக்கை தாக்கல்

தஞ்சமடைந்த பெண்ணின் பெற்றோர் பதிலளிக்க உத்தரவு

மேலும், ஆன்லைனில் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் விசாரணையும் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனுதாரர் ஷாலினி தனக்கு பாதுகாப்பு கொடுத்த தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் நீதிபதி, இந்த நூற்றாண்டிலும் மாந்திரீகம், பில்லி, சூனியம் முதலியவற்றை நம்பி நரபலி கொடுக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார். தஞ்சமடைந்த அந்த பெண்ணிற்கும், அவருக்கு உதவிய 2 பேருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு குறித்து ஷாலினி ஷர்மாவின் பெற்றோர் பதிலளிக்க வேண்டும் என்றும், இது குறித்த அறிக்கையினை போபால் காவல் ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.