NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு
    வாடிக்கையாளர்களிடம் செல்போன் நம்பர் கேட்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    May 24, 2023
    03:19 pm

    செய்தி முன்னோட்டம்

    தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் செல்போன் நம்பர் கேட்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    செல்போன் நம்பர் கொடுக்கவில்லை என்றால் விற்பனையாளர்கள் சேவைகளை வழங்க மறுப்பதாகப் பல வாடிக்கையாளர்கள் புகார் செய்ததை அடுத்து இந்த அறிவுரையை நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    "விற்பனையாளர்கள் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை வழங்கும் வரை பில் போட முடியாது என்று கூறுகிறார்கள். இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாயமற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறையாகும்." என்று நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

    details

    தனியுரிமை பிரச்னைகளும் இதனால் ஏற்படுகிறது: சிங்

    இதனால், தனியுரிமை பிரச்னைகள் ஏற்படுவதாக கூறிய சிங், நுகர்வோர் நலன் கருதி சில்லறை வணிகம், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு(FICCI) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவற்றுக்கு ஒரு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இந்தியாவில் பொருட்களை டெலிவரி செய்ய அல்லது பில் ஒன்றை உருவாக்க செல்போன் எண்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு தர தேவையில்லை என்று சிங் மேலும் கூறினார்.

    ஆனால், பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் காட்டாயம் செல்போன் எண்ணை வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் கூறுவதால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மோசமான சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழியும் இருப்பதில்லை என்று ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்

    இந்தியா

    2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்? ரிசர்வ் வங்கி
    கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறதா மத்திய அரசு? கூகுள்
    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி  உலகம்
    இன்றைய தங்க விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை

    மத்திய அரசு

    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்  மு.க ஸ்டாலின்
    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  இந்தியா
    சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை  ஓடிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025