NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் 

    தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 19, 2024
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியது. மேலும், பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

    பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

    தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    India

    உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்கவில்லை

    இதனையடுத்து, ஆகஸ்ட்-23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

    அதன் பிறகு, தவறான தகவல்களைக் பரப்பும் அனைத்து மருந்துவ விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

    நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை பரப்ப வேண்டாம் என்று பதஞ்சலியிடம் உச்சநீதிமன்றம் மேலும் கேட்டுக் கொண்டது.

    இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்கவில்லை.

    அதனால், அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உச்ச நீதிமன்றம்

    பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு  குஜராத்
    சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் பொன்முடி
    அதிமுக விவகாரம்: உச்ச நீதிமன்றத்தால் ஓபிஎஸ்-இற்கு மற்றுமொரு அடி அதிமுக
    உச்ச நீதிமன்ற கெடு முடிவடைந்ததை அடுத்து பில்கிஸ் பானோ குற்றவாளிகள் குஜராத்தில் சரண் குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025