Page Loader
மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

எழுதியவர் Sindhuja SM
Apr 21, 2024
01:52 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய மற்றும் கீழ் மலைகளில் கடுமையான பனிப்பொழிவுடன் மழை பெய்துவருவதால், இமாச்சல பிரதேசத்தில் குறைந்தது 104 சாலைகள் மற்றும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் சனிக்கிழமை மூடப்பட்டன. லாஹவுல், ஸ்பிதி, குலு, சம்பா, காங்க்ரா ஆகிய இடங்களில் உள்ள முக்கிய வழித்தடங்கள் இதில் அடங்கும். இதனால் உள்ளூர் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக காங்க்ராவில் ஒரு பாலம் அடித்துச் செல்லப்பட்டது. விரைவில் புதிய பாலம் கட்ட உள்ளாட்சி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

இமாச்சல் 

வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் 

இதற்கிடையில், எல்லைச் சாலைகள் அமைப்பு(பிஆர்ஓ) தடைகளை அகற்றவும், பயணிகளுக்கான போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கவும் மனிதவளம் மற்றும் இயந்திரங்களைத் திரட்டி வருகிறது. தென்மேற்கு பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றும் IMD கணித்துள்ளது. 1971-2020 க்கு இடைப்பட்ட காலத்தில் 87cm ஆக அமைக்கப்பட்டிருந்த நீண்ட கால சராசரியில்(LPA) 106% மழை பெய்யக்கூடும் என்று அளவு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு இந்தியாவில் ஏப்ரல் 24 வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை, மற்றும் பலத்த காற்றும் அடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், ஏப்ரல் 21-22 தேதிகளில் மத்திய மற்றும் தென் தீபகற்ப இந்தியா முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கூடிய மழை பெய்யக்கூடும்.