NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

    மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2024
    01:52 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய மற்றும் கீழ் மலைகளில் கடுமையான பனிப்பொழிவுடன் மழை பெய்துவருவதால், இமாச்சல பிரதேசத்தில் குறைந்தது 104 சாலைகள் மற்றும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் சனிக்கிழமை மூடப்பட்டன.

    லாஹவுல், ஸ்பிதி, குலு, சம்பா, காங்க்ரா ஆகிய இடங்களில் உள்ள முக்கிய வழித்தடங்கள் இதில் அடங்கும்.

    இதனால் உள்ளூர் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கனமழை காரணமாக காங்க்ராவில் ஒரு பாலம் அடித்துச் செல்லப்பட்டது. விரைவில் புதிய பாலம் கட்ட உள்ளாட்சி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

    இமாச்சல் 

    வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் 

    இதற்கிடையில், எல்லைச் சாலைகள் அமைப்பு(பிஆர்ஓ) தடைகளை அகற்றவும், பயணிகளுக்கான போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கவும் மனிதவளம் மற்றும் இயந்திரங்களைத் திரட்டி வருகிறது.

    தென்மேற்கு பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றும் IMD கணித்துள்ளது.

    1971-2020 க்கு இடைப்பட்ட காலத்தில் 87cm ஆக அமைக்கப்பட்டிருந்த நீண்ட கால சராசரியில்(LPA) 106% மழை பெய்யக்கூடும் என்று அளவு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

    வடகிழக்கு இந்தியாவில் ஏப்ரல் 24 வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை, மற்றும் பலத்த காற்றும் அடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல், ஏப்ரல் 21-22 தேதிகளில் மத்திய மற்றும் தென் தீபகற்ப இந்தியா முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கூடிய மழை பெய்யக்கூடும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்

    சமீபத்திய

    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025