NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன்
    பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன்

    எழுதியவர் Sindhuja SM
    May 31, 2023
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்று(மே 31) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    "என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், நான் தூக்கில் தொங்கிவிடுவேன். உங்களிடம்(மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும். எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்," என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    இன்று பிற்பகல், "டெல்லி காவல்துறை தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்" என்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

    details

    முழுமையான விசாரணைக்குப் பின்னரே நீதிமன்றத்தில் முறையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த டெல்லி காவல்துறை, "பெண்மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கில் போலீசார் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே நீதிமன்றத்தில் முறையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்று கூறியுள்ளது.

    ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை
    டெல்லி

    சமீபத்திய

    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்

    இந்தியா

    சாலை வழி பயணமாக அமெரிக்கா டூ இந்தியா பயணம் செய்த நபர்  அமெரிக்கா
    IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்? வணிகம்
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா

    காவல்துறை

    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  இந்தியா
    சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்  தமிழ்நாடு
    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  திருவண்ணாமலை

    காவல்துறை

    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  தூத்துக்குடி
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா

    டெல்லி

     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா
    இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா? ஆப்பிள் நிறுவனம்
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025