NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைப்பு - சி.என்.என். புகழாரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைப்பு - சி.என்.என். புகழாரம் 
    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைப்பு - சி.என்.என். புகழாரம்

    உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைப்பு - சி.என்.என். புகழாரம் 

    எழுதியவர் Nivetha P
    May 02, 2023
    06:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் 300 கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    எனினும், இந்த சாலையில் குளிர்காலத்தின்பொழுது ஒரு பகுதி மூடப்படும் என்பதோடு, அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

    இதனால் இப்பகுதியில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்ல ரயில்வே பாதை அமைக்க அரசு முடிவுசெய்தது.

    அதன்படி அப்பகுதியில் அமைந்துள்ள ஜீனப் நதியின் மேலே ரயில்வேப்பாலம் கட்ட முடிவுசெய்யப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்த பாலம் அமைப்பது குறித்து செய்தியினை சி.என்.என்.பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீனப் ஆற்றின் மேலே 359 மீட்டர் உயரத்தில்(1090 அடி உயரம்)இந்த ஜீனப் ரயில்வே பாலம் அமையவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    பாலம்

    ஈபிள் டவரை விட 35 மீட்டர்கள் உயரம் கொண்ட ரயில்வே பாலம் 

    1,315மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் மணிக்கு 266கிமீ.,வேகத்தில் பலத்தக்காற்று வீசுவதையும்,நிலநடுக்கங்களையும் எதிர்கொள்ளும் வகையில் வலிமைமிக்கதாக உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலம் அமைக்கப்படுவதன் மூலம் கத்ரா மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையே உள்ள தொலைவினை கடக்க தற்போது 12மணிநேரம் ஆகும் நிலையில், இந்த நேரமானது பாதியாக குறையும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் 2ஆண்டுகளில் இந்த பாலமானது கட்டி முடிக்கப்படும் என்று வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஷுதோஷ் கங்கால் இன்று கூறியுள்ளார்.

    பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள்டவரை விட 35 மீட்டர்கள் உயரத்தில் இந்த பாலம் அமையவுள்ளது.

    இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரியில் உலகின் உயரமான இந்த ரயில்வே பாலம் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    இந்தியா

    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு  கொரோனா
    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் மகாராஷ்டிரா
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி! இந்திய அணி

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025