NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்
    4000 கி.மீ. நீளும் பிரமாண்ட ஆற்றுவழி பாதை கப்பல் போக்குவரத்து

    வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்

    எழுதியவர் Nivetha P
    Jan 02, 2023
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்திரப்பிரேதேச மாநிலம் வாரணாசிக்கும், அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரம் வரை வங்கதேசம் வழியாக நீர்வழி வழித்தட போக்குவரத்து நடைபெறவுள்ளது என்று சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.

    4000 கி.மீ. தூரத்திற்கு நீளும் இந்த நீர்வழி பாதை போக்குவரத்தை இம்மாதம் 13ம் தேதி தான் துவக்கி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் இது குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "வாரணாசியில் இருந்து திப்ரூகர் நகரம் வரை அமையவுள்ள இந்த ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து, இந்திய சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதன் அடையாளமாக கருதப்படும்.

    மேற்கு வங்க மக்கள் இந்த போக்குவரத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    இதில் 50 நாட்கள் வரை பயணம் மேற்கொள்ளலாம்

    தொடர்ந்து கப்பல்கள் இயக்கப்படும்-இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை அமைப்பு அறிவிப்பு

    தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆற்றுவழி பயணமானது இம்மாதம் 13ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நீர்வழி பாதையில் செல்லும் கப்பல் 50 சுற்றுலா தளங்களை அணுகி பயணிக்கவுள்ளது.

    வாரணாசி கங்கா ஆரத்தி, காசிரங்கா தேசிய பூங்கா, சுந்தரவன காடுகள் போன்ற இடங்களை இந்த நீர்வழி பாதை மூலம் பயணித்து பார்வையிடலாம்" என்று கூறினார்.

    ஆறுகள் வழியே செல்லும் உலகின் மிக நீளமான நீர்வழி பாதையாக இது அமையவுள்ளது. கங்கை, பாகீரதி, ஹூக்ளி, பிரம்மபுத்ரா, மேற்கு கடற்கரை கால்வாய் வழியாக செல்லும் இந்த கப்பலில் 50 நாட்கள் பயணம் செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், தனியார் நிறுவனம் இந்தப்பாதையில் தொடர்ந்து கப்பல்களை இயக்கும் என்று இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை அமைப்பு தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025