NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்
    இந்தியா

    வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்

    வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்
    எழுதியவர் Nivetha P
    Jan 02, 2023, 03:31 pm 1 நிமிட வாசிப்பு
    வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்
    4000 கி.மீ. நீளும் பிரமாண்ட ஆற்றுவழி பாதை கப்பல் போக்குவரத்து

    உத்திரப்பிரேதேச மாநிலம் வாரணாசிக்கும், அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரம் வரை வங்கதேசம் வழியாக நீர்வழி வழித்தட போக்குவரத்து நடைபெறவுள்ளது என்று சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். 4000 கி.மீ. தூரத்திற்கு நீளும் இந்த நீர்வழி பாதை போக்குவரத்தை இம்மாதம் 13ம் தேதி தான் துவக்கி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் இது குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "வாரணாசியில் இருந்து திப்ரூகர் நகரம் வரை அமையவுள்ள இந்த ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து, இந்திய சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதன் அடையாளமாக கருதப்படும். மேற்கு வங்க மக்கள் இந்த போக்குவரத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து கப்பல்கள் இயக்கப்படும்-இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை அமைப்பு அறிவிப்பு

    தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆற்றுவழி பயணமானது இம்மாதம் 13ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நீர்வழி பாதையில் செல்லும் கப்பல் 50 சுற்றுலா தளங்களை அணுகி பயணிக்கவுள்ளது. வாரணாசி கங்கா ஆரத்தி, காசிரங்கா தேசிய பூங்கா, சுந்தரவன காடுகள் போன்ற இடங்களை இந்த நீர்வழி பாதை மூலம் பயணித்து பார்வையிடலாம்" என்று கூறினார். ஆறுகள் வழியே செல்லும் உலகின் மிக நீளமான நீர்வழி பாதையாக இது அமையவுள்ளது. கங்கை, பாகீரதி, ஹூக்ளி, பிரம்மபுத்ரா, மேற்கு கடற்கரை கால்வாய் வழியாக செல்லும் இந்த கப்பலில் 50 நாட்கள் பயணம் செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனியார் நிறுவனம் இந்தப்பாதையில் தொடர்ந்து கப்பல்களை இயக்கும் என்று இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மோடி

    சமீபத்திய

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா

    மோடி

    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023