NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை 
    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை

    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை 

    எழுதியவர் Nivetha P
    Nov 10, 2023
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஓர் ஜவுளிக்கடையில் பெண்கள் கும்பல் ரூ.2 லட்சம் மதிப்புடைய புடவைகளை திருடியதாக கூறப்படும் சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

    விஜயவாடா பகுதியினை சேர்ந்த 6 பெண்கள், சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஜவுளிக்கடைக்கு துணி எடுக்கும் வாடிக்கையாளர்கள் போல் வந்துள்ளனர்.

    கடந்த அக்.,28ம் தேதி இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்துள்ளது.

    அந்த ஆய்வில், இந்த கும்பலை சேர்ந்த பெண்கள் அந்த ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுடன் பேச்சு கொடுக்கையில், மற்ற பெண்கள் புடவைகளை எடுத்து தங்கள் புடவைக்குள் மறைத்து வைத்துக்கொள்கிறார்கள்.

    இந்த பெண்கள் கும்பல் அனைவருமே புடவை அணிந்துள்ளனர் என்பதும் சிசிடிவி'யில் பதிவாகியுள்ளது.

    திருட்டு 

    திருடிய புடவைகளை திருப்பி கொடுத்த திருட்டு கும்பல் 

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை காவல்துறையினருக்கு எந்தவொரு தகவலும் இக்கும்பல் குறித்து கிடைக்கவில்லை.

    இதனிடையே இப்பெண்கள் விஜயவாடாவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்னும் சந்தேகம் சென்னை போலீசாருக்கு எழுந்துள்ளது.

    எனவே இத்தகவல் விஜயவாடா போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் தங்கள் விசாரணையினை மேற்கொண்டு அந்த பெண்கள் கும்பலை பிடித்துள்ளனர்.

    பிடிபட்ட அந்த கும்பல் தங்கள்மீது வழக்குப்பதிவாகாமல் இருக்க திருடிய புடவைகள் அனைத்தையும் திருப்பி கொடுத்துள்ளனர்.

    அதனை விஜயவாடா போலீசார் சென்னை சாஸ்திரி நகர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த புடவைகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.

    இதுபோன்ற பண்டிகை காலங்களில் தங்கள் கைவரிசையை காட்டுவதனை இந்த கும்பல் வழக்கமாக வைத்துள்ளனர்.

    எனவே, தீபாவளி முடிந்தப்பின்னர் சென்னை போலீசார் அவர்களை கைது செய்ய விஜயவாடா விரைகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    சென்னை
    பண்டிகை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கைது

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தர்ணா போராட்டம்  அண்ணாமலை
    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ் ஹரியானா
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு  செந்தில் பாலாஜி

    சென்னை

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி  கம்யூனிஸ்ட்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 29 தங்கம் வெள்ளி விலை
    செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர் அமெரிக்கா
    இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ஸ்டாலின்

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு

    காவல்துறை

    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி கார்
    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை காவல்துறை
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025