NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் 
    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 13, 2023
    07:22 pm
    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் 
    உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    இந்தியாவில் அதிகமான பெண்கள் தங்கள் கணவனைக் கொலை செய்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பாலின சமத்துவத்திற்கு ஏற்றவாறு சரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. பத்திரிகையாளர் தீபிகா நாராயண் பரத்வாஜ் குழுவால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி இந்த ஆய்வு தகவல் வெளியாகி இருக்கிறது. 2022ல் ஒவ்வொரு 32 மணி நேரத்திற்கும் ஒரு பெண் தன் கணவனைக் கொலை செய்திருக்கிறாள் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டில் ஆண்கள் தங்கள் மனைவிகளால் கொல்லப்பட்ட, 271 கொலை வழக்குகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    2/2

    218 வழக்குகள் கள்ள தொடர்பினால் ஏற்பட்டது

    இவற்றில், 218 வழக்குகள் கள்ள தொடர்பினால் ஏற்பட்டது என்றும், இந்த வழக்குகளில் பெண்கள் தங்கள் காதலனுடன் சேர்ந்து சதி செய்து கணவனை கொன்றதாக கூறப்படுகிறது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்ட்டுள்ளது. சுமார் 48 வழக்குகள் வீட்டுச் சண்டைகளால் ஏற்பட்டவை. 4 வழக்குகள் பணம் அல்லது காப்பீட்டு பிரச்சனைகளால் ஏற்பட்டது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தான் அதிக கொலைகள் பதிவாகியுள்ளது. டிசம்பர் 2022இல், 47 கொலை வழக்குகள் பெண்கள் மீது போடப்பட்டுள்ளது. அந்த மாதம் மட்டும் ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு பெண் தன் கணவனைக் கொலை செய்திருக்கிறாள். நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்து வெளியிடப்படும் செய்திகள் உண்மையான வழக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கிறது என்றும் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    குற்றவியல் நிகழ்வு

    இந்தியா

    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  தமிழ்நாடு
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    இந்தியாவின் வெப்பநிலை விரைவில் உயரும்: வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    சிறைத்தண்டனைக்கு முறையீடு செய்ய உள்ளோம் - தன்னிலை விளக்கம் அளித்த லிங்குசாமி! கோலிவுட்

    குற்றவியல் நிகழ்வு

    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023