Page Loader
விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது 
ஆயுர்வேத ஸ்பா மீது ஏவிஎஸ் போலீஸார் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விபச்சார வழக்குப் பதிவு செய்தனர்.

விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது 

எழுதியவர் Sindhuja SM
Jul 17, 2023
05:31 pm

செய்தி முன்னோட்டம்

விபச்சார வழக்கில் இருந்து தப்பிக்க ஸ்பா பெண் உரிமையாளருக்கு உதவிய திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் இன்று(ஜூலை-17) கைது செய்யப்பட்டார். ஸ்பா உரிமையாளரான அஜிதாவிடம் இருந்து 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, சப்-இன்ஸ்பெக்டர் ராமாவை(53), ​​திருச்சி விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குனரக(DVAC) அதிகாரிகள் குழு, கையும் களவுமாக பிடித்தது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆயுர்வேத ஸ்பா மீது ஏவிஎஸ் போலீஸார் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விபச்சார வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த எஸ்ஐ ரமா, கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த அஜிதாவுக்கு சாதகமாக இந்த வழக்கை முடித்து வைப்பதற்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

விசாவா

லஞ்சம் வாங்கி தங்களுக்குள் பங்கு வைத்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் 

ஆனால், தனது நிதி நிலைமையை காரணம் காட்டிய அஜிதா, எஸ்ஐயிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முன்பணமாக ரூ.3,000 மட்டும் கொடுக்க ஒப்புக்கொண்டார். அதற்கு மேலும் அஜிதாவை எஸ்ஐ வற்புறுத்தியதால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, DVACவிடம் இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து, DVAC அதிகாரிகள் ரமாவை பொறி வைத்து பிடித்தனர். மேலும், ரமா சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.5.4 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். ரமா கடந்த பல ஆண்டுகளாக ஏவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருச்சியில் 60 ஸ்பாக்கள் உள்ளன. ரமா ஒவ்வொரு ஸ்பாவில் இருந்தும் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை லஞ்சம் பெற்றுள்ளதாகவும், அதில் ஒரு பங்கு அவரது உயர் அதிகாரிகளுக்குப் போவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.