NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது 
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது

    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Jul 23, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி(34), ரயிலில் பழ வியாபாரம் மற்றும் சமோசா விற்று வந்த இவர் கடந்த 19ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் வியாபாரம் செய்துள்ளார்.

    அப்போது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜேஸ்வரியை, அதே ரயிலில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர் என்று கூறப்படுகிறது.

    அரிவாளால் வெட்டப்பட்ட ராஜேஸ்வரியை ரயில்வே போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

    கொலை 

    சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் 

    இவருக்கு இமானுவேல்(11), சோபியா(7)உள்ளிட்ட 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது கணவன் டக்கா மணி உயிரிழந்த நிலையில் புவனேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    முன்விரோதம் காரணமாகவே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் கொலை செய்தவர்களை கைதுச்செய்ய 3 தனிப்படைகளை காவல்துறை அமைத்தது.

    சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு சற்று கடினமாக இருந்துள்ளது.

    இந்நிலையில் ராஜேஸ்வரியை கொலை செய்த 5 பேரினை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி உள்பட ஜெகதீசன், ஜான்சன், சக்திவேல், சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    கைது
    சென்னை
    காவல்துறை

    சமீபத்திய

    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான் ஐபிஎல் 2025

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    சென்னை

    ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு தமிழகம்
    மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம் மெட்ரோ
    சென்னையில் மியூசிக் சிக்னல்களின் மெல்லிசை தற்காலிக நிறுத்தம்  போக்குவரத்து காவல்துறை
    அரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் போதைப்பொருள்
    ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ  சைபர் கிரைம்
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  அறநிலையத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025