NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி 

    குடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையின் வோர்லியில் இன்று அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார்.

    இந்த காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர் ஒருவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் நடந்த பிறகு 24 வயதுடைய மிஹிர் ஷா தலைமறைவாகியுள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்கள், வொர்லியின் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    மீனவர்களான அவர்கள் மீன்களை வாங்கிக் கொண்டு சசூன் டாக்கில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அதிகாலை 5:30 மணியளவில் அட்ரியா மால் அருகே ஒரு BMW கார் அவர்களை இடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மும்பை 

    'இந்த வழக்கு பாரபட்சமின்றி விசாரிக்கப்படும்': முதல்வர் ஷிண்டே

    அவர்கள் சென்ற பைக்கை ஒரு BMW கார் பின்னால் இருந்து வந்து மோதியதால் பலத்த காயம் அடைந்த அந்த மீனவரின் மனைவி காவேரி நகாவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    BMW கார் ஓட்டுநர் மிஹிர் ஷாவை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக மும்பை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சம்பவம் நடந்தபோது மிஹிரின் டிரைவரும் அவருடன் காருக்குள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறிய முதல்வர் ஷிண்டே, இந்த வழக்கு பாரபட்சமின்றி விசாரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

    "மும்பையில் நடந்த ஹிட் அண்ட் ரன் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நான் காவல்துறையிடம் பேசினேன். சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்" என்று முதல்வர் ஷிண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    மும்பை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மகாராஷ்டிரா

    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு
    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி  மும்பை
    தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்  மும்பை
    பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள் பெங்களூர்

    மும்பை

    பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் பீகார்
    இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம் விமானம்
    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே வெடிகுண்டு மிரட்டல்: உஷார் நிலையில் மும்பை காவல்துறை
    வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு  தாவூத் இப்ராஹிம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025