வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண்
பெங்களூரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ரேபிடோ பைக் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரின் யெலஹங்காவில் நடந்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த ரேபிடோ ஓட்டுநர் தீபக் ராவ்(27), தகாத முறையில் தன்னைத் தொட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். ரேபிடோ ஓட்டுநர் தன்னை தொடுவதை நிறுத்தாததால், பைக்கில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அந்த பெண் கூறியுள்ளார். இச்சம்பவம் ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்துள்ளது. யெலஹங்கா நியூடவுன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டப்பட்ட தீபக் ராவ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.