NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை
    சிசுபாலனின் அச்சுறுத்தலுக்கு பயந்து இந்த விவகாரத்தை அந்த சிறுமிகள் அப்போது யாரிடமும் சொல்லவில்லை.

    7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

    எழுதியவர் Sindhuja SM
    Nov 28, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த தாய்க்கு 40.6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    போக்சோ சட்டத்தின் கீழ் அந்த தாய்க்கு 40.6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து கேரள சிறப்பு விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், மனநலம் சரியில்லாத தனது கணவனை விட்டு பிரிந்த பிறகு, மார்ச்-2018 முதல் செப்டம்பர்-2019 வரை சிசுபாலன் என்ற தனது காதலருடன் வசித்து வந்தார்.

    அந்த காலகட்டத்தின் போது, சிசுபாலன் பாதிக்கப்பட்ட சிறுமியை பலமுறை கொடூரமாக துன்புறுத்தி இருக்கிறார்.

    பாதிக்கப்பட்ட 7-வயது சிறுமியையும் அந்த சிறுமியின் 11-வயது மூத்த சகோதரியையும் சிசுபாலன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார்.

    திலகவ்ன்ஜ்த்

    தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி 

    இதெல்லாம், அந்த சிறுமிகளின் தாயின் முன்னிலை நடந்திருக்கிறது.

    சிசுபாலனின் அச்சுறுத்தலுக்கு பயந்து இந்த விவகாரத்தை அந்த சிறுமிகள் அப்போது யாரிடமும் சொல்லவில்லை.

    இதனையடுத்து, தன் தங்கையுடன் அந்த வீட்டில் இருந்து தப்பித்த அந்த 11 வயது சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

    அதன் பிறகு தான், அந்த சிறுமிகளுக்கு நடந்த கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

    விசாரணையின் போது, ​​முதல் குற்றவாளியான சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அந்த சிறுமிகளின் தாயின் மீது மட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    குற்றம்சாட்ட தாயின் மற்றொரு காதலரும் அந்த குழந்தைகளை பாலியல் பலாத்தகாரம் செய்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட குழந்தைகள் தற்போது குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    திருவனந்தபுரம்
    பலாத்காரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கேரளா

    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்  பினராயி விஜயன்
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் தமிழ்நாடு
    சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம் சஞ்சு சாம்சன்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு

    திருவனந்தபுரம்

    திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன? விமான சேவைகள்

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025