NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் வாழ்க்கை குறிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் வாழ்க்கை குறிப்பு 
    சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் வாழ்க்கை குறிப்பு

    சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் வாழ்க்கை குறிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 21, 2023
    08:25 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துமனையான சங்கர நேத்ராலயாவின் நிறுவனரான எஸ்.எஸ்.பத்ரிநாத் இன்று காலை காலமானார்.

    இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை 1978 இல் சென்னையில் நிறுவினார்.

    தற்போது உலகெங்கும் இருந்து பலரும், இந்த கண் மருத்துவமனையில் வழங்கப்படும் உயர்தர சிகிச்சையை நாடி வருகின்றனர்.

    குறைந்த விலையில், உயர்தர சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனையின் தூணான பத்ரிநாத்தின் வாழ்க்கையை பற்றி ஒரு சிறு குறிப்பு.

    card 2

    பத்ரிநாத்தின் வாழ்க்கை பயணம் 

    செங்கமேடு சீனிவாச பத்ரிநாத், என்கிற SS பத்ரிநாத், சென்னையில் பிறந்தவர்.

    சிறு வயதிலேயே பெற்றோர் இருவரையும் இழந்த பத்ரிநாத், பெற்றோரின் காப்பீட்டுத் தொகையை கொண்டு தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார்.

    அவர் நியூயார்க்கில் மேற்படிப்பை முடித்து தனது டாக்டர் பணியினை தொடர்ந்தார்.

    அங்குள்ள , பல கண் மருத்துவ மையங்களில் பயிற்சி பெற்ற இவர், 1978ஆம் ஆண்டில், தான் பிறந்த ஊரில், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் இலாப நோக்கற்ற கண் மருத்துவமனையை துவக்க முடிவெடுத்தார்.

    அதன் வித்தே இந்த புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா நிறுவனம்.

    card 3

    இலவசமாக நடைபெறும் தினசரி 100 அறுவை சிகிச்சைகள்

    சங்கர நேத்ராலயாவில், தினந்தோறும் கிட்டட்டத்தட்ட, 1200 நோயாளிகளுக்கும் மேல், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அதோடு, தினமும் 100 அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்கிறார்கள்.

    இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஐ இன்ஸ்டிட்யூட்டில், வளர்ந்து வரும் கண் மருத்துவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

    இத்தகைய பெருமை மிகு நிறுவனத்தை ஸ்தாபித்த டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், மத்திய அரசின் பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மருத்துவமனை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சென்னை

    73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்த 97 வயது முதியவர்  கேரளா
    #கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது கார்த்தி
    தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல்  பருவமழை
    சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது  கைது

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025