NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா?
    பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நண்பனின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி: யாரிந்த பிரேமோதய் காக்கா?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 21, 2023
    06:58 pm

    செய்தி முன்னோட்டம்

    மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேமோதய் காக்கா, டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இணை இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.

    அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, சிறார் நீதி(JJ) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான நோடல் அதிகாரியாக காக்கா பணியாற்றி வந்தார்.

    அவர் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கான வரைவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

    சிங்கள்

     பிரேமோதய் காக்கா இன்று கைது செய்யப்பட்டார் 

    பிரேமோதய் காக்கா, தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கருவுற செய்ததற்காக இன்று கைது செய்யப்பட்டார்.

    இந்த கைது குறித்து தகவல் அளித்த வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) சாகர் சிங் கல்சி, குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து வருவதாகவும், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    மற்ற சாட்சிகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் அடுத்து விசாரிப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

    சஜிவ்க்

    சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக ஊட்டிய காக்காவின் மனைவி 

    2020ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால், அந்த சிறுமி தன் தந்தையின் நண்பரான காக்காவின் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரேமோதய் காக்கா நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை பாதிக்கப்பட்ட சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும், இந்த பலாத்கார சம்பவங்களால் கர்ப்பமான 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக காக்காவின் மனைவி ஊட்டிவிட்டு, கர்பத்தை கலைக்க செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் இன்னும் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்படவில்லை. தற்போதைக்கு அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிக்ஸ்

    உளவியல் கவுன்சிலிங்கால் வெளிச்சத்திற்கு வந்த இந்த கொடூர சம்பவம் 

    பல நாட்களாக இந்த சம்பவத்தை வெளியே சொல்லாத அந்த சிறுமி, மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் உளவியல் கவுன்சிலிங் செய்த போது தான், 14 வயது சிறுமிக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    சிறுமியின் பிரச்சனையை தெரிந்து கொண்ட உளவியல் மருத்துவர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜேசனியூ

    பிரேமோதய் காக்காவை சஸ்பெண்ட் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி மீது ஐபிசி பிரிவு 120-பி(குற்றச் சதி) இன் கீழ் குற்றத்தில் அவருக்கு உதவியதற்காக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரப் பரத்வாஜ், "இது ஒரு கொடூரமான சம்பவம். இந்த சம்பவம் மனித குலத்தை அவமானப்படுத்தியுள்ளது" என்றார்.

    டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பலாத்காரம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டெல்லி

    'பிரிஜ் பூஷனை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் இருக்கிறது': டெல்லி காவல்துறை  பிரிஜ் பூஷன் சரண் சிங்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  வெள்ளம்
    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் ஹரியானா
    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  அரவிந்த் கெஜ்ரிவால்

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025