NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்?
    சமீபத்தில் நியூஸ்கிளிக் என்ற ஊடக நிறுவனம் மூலம் பொய் தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி அளிப்பது, அமெரிக்கா தொழிலதிபர், நெவில் ராய் சிங்கம் எனக்கூறப்பட்டுள்ளது.

    இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 08, 2023
    09:17 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியை பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், காங்கிரஸ் தலைவர்கள் புடைசூழ ஆரவாரத்துடன் மீண்டும் மக்களவைக்குள் நுழைந்தார்.

    அப்போது, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே,"அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்க ஊடகங்கள் வெளிநாட்டிலிருந்து குறிப்பாக சீனா போன்ற நாடுகளிலிருந்து நிதியுதவியை பெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், நியூஸ்கிளிக் ஊடகம் ரூ.38 கோடி நிதியை திரட்டியுள்ளது." எனக்கூறினார்.

    இவர் கடந்த 5-ஆம் தேதி வெளியான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த கேள்வியை எழுப்பினார்.

    அந்த செய்திப்படி, சீனாவுக்கு சாதகமாக செயல்பட இந்திய ஊடகத்துக்கு சீன தரப்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    card 2

    எங்கிருந்து பெறப்பட்ட பணம்?

    மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே மேலும், "நியூஸ்கிளிக் ஊடகத்துக்கு எவ்வாறு நிதியுதவி கிடைத்தது, அதனால் பயனடைந்தவர்கள் யார் என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். 2005 மற்றும் 2014-க்கு இடையில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் கட்சி சீனாவிடமிருந்து பணத்தை பெற்றுள்ளது. கடந்த 2008-ல் சோனியாவையும், ராகுலையும் அவர்கள் சந்திக்க அழைத்திருந்தனர். டோக்லாம் நெருக்கடியின்போது அவர்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்" எனக்குற்றம் சாட்டினார்.

    இதை தொடர்ந்து, அவையில் கூச்சல் குழப்பும் நிலவியது. எனினும் இது குறித்து, ராகுல் காந்தி பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல் என்ன என்பதை குறித்த சிறு குறிப்பு இதோ:

    card 3

    யார் அந்த நெவில் ராய் சிங்கம்?

    கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒரு தனியார் அமைப்பு, ஆசியா வம்சாவளிகளுக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடைபெறுவதாக கூறி, திடீர் போராட்டங்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டது.

    இதே அமைப்பு, ஹாங்காங்கிலும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதுக்கு குறித்து, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நடத்திய புலனாய்வில், இந்த போராட்ட அமைப்பு, சீனாவின் பினாமி அமைப்பு என தெரியவந்துள்ளது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவை சேர்ந்த இலங்கை வம்சாவளி தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் என்பவர் நிதியுதவி செய்து வருகிறார். இவர் சீன அரசின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுபவர்.

    card 4

    தாட்வோர்க்ஸ் நிறுவன தலைவர் நெவில் ராய் சிங்கம் 

    மே 13, 1954 இல் அமெரிக்காவில் பிறந்த நெவில் ராய் சிங்கத்தின் தந்தை, இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அவர், புரூக்ளின் கல்லூரியில் அரசியல் அறிவியல் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

    அதனால், சிறு வயது முதல், நெவில் ராய் அமெரிக்காவில் வளர்ந்துள்ளார்.

    அமெரிக்காவின் சிகாகோ நகரை தலைமையிடமாகக் கொண்டு 'தாட்வோர்க்ஸ்' என்ற சாப்ட்வேர் நிறுவனத்தையும், பல்வேறு அறக்கட்டளைகளையும் சிங்கம் நடத்தி வருகிறார்.

    அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மற்றும் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்த நிறுவனங்கள், தென்னாப்பிரிக்காவில் ஓர் அரசியல் கட்சி,அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஜாம்பியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்களுக்கு, நெவில் ராய் சிங்கம் நிதியுதவி வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    card 5

    சீனாவின் பிரச்சாரத்துறையுடன் இணைந்த சிங்கம்?

    தற்போது, சிங்கம், சீனாவின் ஷாங்காய் நகரில் முக்கிய அலுவலகங்கள் செயல்படும் டைம்ஸ் சதுக்கத்தின் 18வது மாடியில், தன்னுடைய அலுவலகத்தை நடத்தி வருவதாகவும், தனது தொடர்புகள் மூலமாக ஷாங்காய் நகரின் அரசாங்க பிரச்சாரத் துறையுடன் இணைந்து ஒரு யூட்யூப் நிகழ்ச்சியை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், இந்தியாவில் செயல்படும் 'நியூஸ்கிளிக்' என்ற ஊடகத்துக்கு அவரது சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது எனவும், இதன் காரணமாகவே, இந்த ஊடகம் சீனாவுக்கு ஆதரவான, சாதகமான செய்திகளை வெளியிட்டு வருகிறது எனவும் தற்போது நியூயார்க்-டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட சிங்கம் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறார். இதுதொடர்பாக தனது நிறுவனங்கள், நண்பர்கள் வாயிலாக அவர் காய்களை நகர்த்தி வருகிறார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனப் பயன்பாட்டில் 0.8% மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகப்படுத்தியிருக்கிறது நாய்ஸ் கேட்ஜட்ஸ்
    ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் பீகார்

    சீனா

    சீனாவில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் லியோனல் மெஸ்ஸி கால்பந்து
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு உலகம்
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உலகம்
    விண்வெளிக்குச் செல்லும் சீனா ராணுவத்தை சாராத முதல் சீனர்.. எப்போது? விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025