NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    காக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண்
    ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண்

    காக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 26, 2025
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நேற்று அதிகாலை தொடர் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கமிஷனர் அருணின் ஆலோசனை பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாலைக்குள் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் என்கவுண்டரில் சுட்டுகொல்லப்பட்டான்.

    பதுக்கி வைத்த நகைகளை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது, கொள்ளைக்காரன் தப்பி செல்ல முயற்சித்ததாகவும், அவன் நிறுத்தி வைத்திருந்த பைக்கில் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியால் போலீசாரை சுட முயற்சித்ததால் இந்த என்கவுண்டர் நடைபெற்றதாகவும் கமிஷனர் அருண் தெரிவித்தார்.

    கடந்த சில மாதங்களாக அருண் தலைமையில் தொடர்ந்து நடைபெறும் வரும் என்கவுண்டரில் இதுவும் ஒன்றாகும். யார் அவர்?

    விவரங்கள்

    என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என குறிப்பிடப்படும் அருண் IPS

    BSP தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பின்னர் சென்னையின் ஆணையராக அருண் பதவி ஏற்றார்.

    அதற்கு முன்னர் அவர் அண்ணா நகர், மற்றும் பரங்கி மலை துணை ஆணையராக இருந்தார்.

    சென்னை சிட்டியின் ஆணையராக பதவியேற்றதும் அவர் கூறிய முதல் வார்த்தை, "குற்றவாளிகளுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் பாடம் கற்பிக்கப்படும்" என்றார்.

    அதோடு ரௌடியைகளை மண்டியிட செய்வேன் எனவும் உறுதியளித்தார்.

    அவர் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த காலகட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரொக்கமில்லா மின்-சலான் கட்டண முறையை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு.

    அண்ணா நகரில் போக்குவரத்து விதிமீறல்களை தானாகவே கண்காணிக்க போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிக்கப்பட்ட மண்டலத்தையும் (TROZ 1) அவர் அறிமுகப்படுத்தினார்.

    4வது என்கவுண்டர்

    காவல் ஆணையராக பதவியேற்றதும் 4வது என்கவுண்டர்

    ஜூலை 2024 இல் சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அருண் பொறுப்பேற்றதிலிருந்து நகரில் நடந்த நான்காவது என்கவுண்டர் இன்று நடந்த ஈரானிய கொள்ளையன் மரணம் ஆகும்.

    இதற்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம், போலீசார் மாதவரம் ஏரிக்கு சாட்சியங்களை சேகரிக்க அழைத்துச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அதேபோல், 60க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட வரலாற்று குற்றவாளியான காக்காத்தோப்பு பாலாஜி, வியாசர்பாடியில் ஒரு போலீஸ் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மற்றொரு உயர்மட்ட வழக்கில், ஆந்திராவில் கைது செய்யப்பட்டு நகரத்திற்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக தாதாவான 'சீசிங்' ராஜாவும் இதே போல சாட்சியங்கள் சேகரிக்க சென்ற இடத்தில் காவல்துறையினரால் கொல்லப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழக காவல்துறை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சென்னை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இந்திய ரயில்வே மின்மயமாக்கலின் நூற்றாண்டு கொண்டாட்டம்; முதல் மின்சார ரயில் எங்கே ஓடியது தெரியுமா? இந்திய ரயில்வே
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ் சிறப்பு பேருந்துகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு செய்தி
    கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை தமிழக காவல்துறை

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்? தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழக காவல்துறை

    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை
    மோசடி புகாரில் சிக்கிய 'பிக் பாஸ்' அபிநய்யின் மனைவி; தலைமறைவு எனத்தகவல் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025