NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய கட்டிடத்திற்கு மாறிய மக்களவை; இப்போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் நிலைமை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய கட்டிடத்திற்கு மாறிய மக்களவை; இப்போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் நிலைமை என்ன?
    பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் நிலைமை என்ன?

    புதிய கட்டிடத்திற்கு மாறிய மக்களவை; இப்போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் நிலைமை என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 19, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பு கூட்டத்தொடரில் கூடினர். பழைய பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடர் அதுவாகும்.

    பிரதமர் மோடியும், பழைய கட்டிடத்தின் வரலாறும், அதன் சிறப்புகள் மற்றும் அது இதுநாள் வரை தாங்கி நிற்கும் நினைவுகள் என பலவற்றை உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

    பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும்.

    1927 இல் கட்டிமுடிக்கப்பட்ட, தற்போது 96 வயதாகும் பழைய பாராளுமன்ற கட்டிடம் இதன் பின் என்னவாகும் என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழாமலில்லை. அதற்கு பதில் இதோ:

    card 2

    பழைய கட்டிடம் இடிக்கப்படாது

    பிரிட்டிஷ் கட்டிடக்கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம், இந்தியாவின் சின்னமாக திகழ்கிறது.

    இந்தியாவின், சுதந்திரப் போராட்டத்தை மட்டுமல்ல, அதன்பிறகு நாட்டின் எழுச்சியையும் கண்ட இந்த தொல்லியல் கட்டிடம் இடிக்கப்படாது என்றும், நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு அதிக செயல்பாட்டு இடங்களை வழங்குவதற்காக இது "புதுப்பிக்கப்படும்" என்றும் செய்திகள் கூறுகின்றன.

    பழைய கட்டிடத்தின் ஒரு பகுதியை அருங்காட்சியகமாக மாற்றலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டிடம், கடந்த மே மாதம், பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பிரமாண்டமான கட்டிடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமரலாம். இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு, 1,280 எம்.பி.க்கள் அமரக்கூடிய அறையும் இங்கே உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    நாடாளுமன்றம்

    ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் திமுக
    இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை சைபர் கிரைம்
    டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது டெல்லி
    குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது? எதிர்க்கட்சிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025