NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?
    ஆறாவது குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார்.

    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 14, 2023
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கையாளும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நேற்று நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி போலீசார் இதுவரை ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    ஆறாவது குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நான்கு ஆண்டுகளாக தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த அத்துமீறலை மிக நுணுக்கமாக அவர்கள் திட்டமிட்டதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

    பல்வேறு பிரச்சினைகளின் பக்கம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த பாதுகாப்பு அத்துமீறலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

    டவ்க்ஜ

    மொபைல் போன்களுடன் தலைமறைவான குற்றவாளி 

    வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் மணிப்பூர் வன்முறை போன்ற பிரச்சனைகளால் தாங்கள் வருத்தமடைந்ததாகவும், அதனால் தான் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விஷயங்கள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் புகை குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், போலீசார் இந்த காரணங்களை முழுமையாக நம்பவில்லை.

    அவர்களின் நோக்கத்தைக் கண்டறிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், அவர்களது மொபைல் போன்கள் அனைத்தும் தற்போது தலைமறைவாக இருக்கும் குற்றவாளி லலித் ஜாவிடம் உள்ளது.

    ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் லலித் செல்போன்களுடன் தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    நாடாளுமன்றம்
    மக்களவை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    டெல்லி: நீதிமன்ற அனுமதியுடன் உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்தித்தார் மணீஷ் சிசோடியா  ஆம் ஆத்மி
    டெல்லியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்  நிலநடுக்கம்
    தடையை மதிக்காமல் பட்டாசு போட்ட மக்கள்: மிகவும் மோசமடைந்தது டெல்லி காற்று மாசு காற்று மாசுபாடு
    செயற்கை மழைப்பொழிவை திட்டமிடும் டெல்லி அரசு; எப்படி சாத்தியம்?  இந்தியா

    நாடாளுமன்றம்

    'மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது': சோனியா காந்தி  காங்கிரஸ்
    பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான புதிய பெயரை அறிவித்தார் பிரதமர் மோடி  புதிய நாடாளுமன்றம்
    'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவை
    மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம்  இந்தியா

    மக்களவை

    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்? பாஜக
    மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்  மணிப்பூர்
    27 நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள்,  3 ஆட்சிக் கவிழ்ப்பு; பாராளுமன்றத்தின் கடந்த கால வரலாறு  இந்தியா
    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நடைபெறும்  பாஜக

    காவல்துறை

    பள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ ஆந்திரா
    பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: காவலர் ஒருவர் கொல்லப்பட்டார், 3 பேர் காயம் பஞ்சாப்
    தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம் மன்சூர் அலிகான்
    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025