NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்
    கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்

    கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2024
    07:55 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகம் முழுவதும் கட்டுக்குள் வந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிவேகமாக பரவ துவங்கியுள்ளது.

    தற்போது பரவும் ஜே.என்.1 வகை கொரோனா பரவுவதில் வேகம் கொண்டுள்ளதுடன், நோய் தடுப்பாற்றலையும் ஊடுருவும் என்று மருத்துவத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்றைய(ஜன.,4) நிலவரப்படி, இந்தியாவில் நோய் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 4,423 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே, கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? என்னும் குழப்பம் நம்முள் பலருக்கு இருக்கும் நிலையில், சில அறிவுறுத்தல்களை சுகாதாரத் துறை அண்மையில் வழங்கியுள்ளது.

    அதன்படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் முதல் 5 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    வீட்டில் முதியோர்கள் இருந்தால் அவர்கள் நிச்சயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பாதிப்பு 

    நோயாளிகள் எண்ணிக்கைகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தல் 

    அதே போல், இணை நோய்கள் இருப்போரும், வயதானோர்களும் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வரும் நாட்கள் பண்டிகை காலங்கள் என்பதால் அடுத்த 15 நாட்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கையையும்,

    கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

    இறப்பு 

    பிஏ 5 வகை திரிபு கொரோனா உயிர்கொல்லியாக கருதப்படுவதாக தகவல் 

    இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5 உயிரிழப்புகள் கொரோனாவால் நேர்ந்ததாக பதிவாகியிருந்த நிலையில், தற்போது சென்னையில் ஒருவர் பலியாகியுள்ளார்.

    இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    பிஏ 5 வகை திரிபு தான் இதுவரை பரவிய கொரோனா தொற்றுகளில் உயிர்கொல்லியாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற கொரோனா திரிபுகளால் பாதிக்கப்பட்டவர்களை விட ஒமிக்ரான் பிஏ 5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் இறப்பு விகிதமே அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜே.என்.1 வகை
    கொரோனா
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜே.என்.1 வகை

    கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்  மருத்துவமனை
    கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்  சுகாதாரத் துறை
    வேகமெடுக்கும் ஜே.என். 1 வகை கொரோனா பரவல்- 24 மணிநேரத்தில் 760 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு  கொரோனா

    கொரோனா

    இந்தியா: ஒரே நாளில் மேலும் 148 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள் கனடா
    கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்  கேரளா

    இந்தியா

    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்  வந்தே பாரத்
    இந்தியாவில் மேலும் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள் பெங்களூர்
    Mphil பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் இல்லை: UGC எச்சரிக்கை  இந்தியா

    உலகம்

    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்
    கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று  கேட்ஜட்ஸ்
    பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல் இத்தாலி
    7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை பிலிப்பைன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025