NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி 
    3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

    3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி 

    எழுதியவர் Nivetha P
    Nov 20, 2023
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும்,

    'ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

    அதன்படி இந்த வழக்கானது கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'சட்டசபை மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது' என்றும்,

    'இதுகுறித்து விரைந்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்திருந்தது.

    மேலும், இதுகுறித்து பதிலளிக்க ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

    ஆளுநர் 

    வழக்கின் அடுத்த விசாரணை 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

    இதனிடைய, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் கடந்த 13ம்.,தேதி திருப்பியனுப்பியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை இன்று(நவ.,20)மீண்டும் நடைபெற்ற நிலையில், 'கடந்த 10ம்.,தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்த பிறகும் மசோதாக்களை திருப்பியனுப்பியது ஏன்?' என்றும்,

    'கடந்த 2020ல்.,இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?' என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    அதனைத்தொடர்ந்து, "இந்திய அரசியலமைப்பு சட்டம் 200ன்-படி, மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக ஆளுநர் கூறமுடியாது" என்று கூறிய நீதிபதிகள் அமர்வு,

    "மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தினை அணுகும்வரை ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்?"என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.

    தொடர்ந்து இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் 24ம்.,தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    தமிழக அரசு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் அமைச்சரவை
    பிரதமர், ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஏழை மாணவியை தங்கவைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி  கவர்னர்
    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு  மு.க ஸ்டாலின்
    அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு அறிவுரை கூறிய தந்தை டி.ஆர்.பாலு  அமைச்சரவை

    தமிழக அரசு

    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்  உயர்நீதிமன்றம்
    சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு சென்னை
    கல்லூரி மாணவர்களுக்கு கோடிங் பயிற்சி அளிக்க புதிய முன்னெடுப்புக்காக தமிழக அரசுடன் கைகோர்த்த குவி இந்தியா
    பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்  பள்ளிக்கல்வித்துறை

    உச்ச நீதிமன்றம்

    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு  தமிழக அரசு
    காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு காவிரி
    சட்டம் பேசுவோம்: பதினாறா? பதினெட்டா? ஒப்புதலுக்கான வயதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  இந்தியா
    ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025