NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை 
    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Jul 11, 2023
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்காளத்தில், கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமையன்று கடும் வன்முறை அரங்கேறியது.

    வேட்புமனு தாக்கல் செய்யவந்த எதிர்க்கட்சிகள் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய இக்கலவரத்தில், 42பேர் உயிரிழந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.

    அம்மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    இந்நிலையில், அங்கிருக்கும் பஞ்சாயத்துராஜ் அமைப்பிலுள்ள 75,000இடங்களில் இந்த உள்ளாட்சி தேர்தலானது நடந்தது.

    வரும் 2024ம்ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பாஜக'வுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இன்று(ஜூலை.,11)நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பிற்கு இடையில் நடந்து வருகிறது.

    வாக்கு எண்ணிக்கை 

    வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - மாநில ஆளுநர் எச்சரிக்கை 

    வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சிசிடிவி கேமராக்களும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

    இதனிடையே இந்த தேர்தல் நடந்த நாளன்று, வாக்குசாவடிகளை சூறையாடுதல், வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகளை தாக்குதல், துப்பாக்கி சூடு, வெடிகுண்டு தாக்குதல் போன்ற நிகழ்வுகளில், அன்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தொடர்ந்து, நேற்று(ஜூலை.,10) 650க்கும் மேற்பட்ட வாக்கு சாவடிகளில் மறு வாக்குப்பதிவும் நடந்துள்ளது.

    இந்நிலையில், இன்று நடக்கும் இந்த வாக்கு என்ணிக்கையின் பொழுது வன்முறையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    மம்தா பானர்ஜி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    மம்தா பானர்ஜி

    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா
    2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025