NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி
    ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி

    ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 28, 2023
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் தரமாக படமெடுப்பதற்காக, ஐபோன் வாங்க காசில்லாமல், பெற்ற குழந்தையை விற்ற பாசக்கார பெற்றோர் பற்றிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

    மேற்குவங்காளம், பாரக்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெய்தேவ்-சதி தம்பதி.

    இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்த தம்பதி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இந்நிலையில், ஒருநாள், அவர்கள் 8 மாத குழந்தையை காணவில்லை. இதுபற்றி பெற்றோர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில், ஜெய்தேவ் கையில் விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை கண்டுள்ளனர் அக்கம்பக்கத்தினர்.

    card 2

    காசுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்

    இதுபற்றி அக்கம்பக்கத்தினர் ஜெய்தேவிடமும், சதியிடமும் விசாரித்துள்ளனர். ஆனால் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்துக்கு வீட்டார், போலீசிடம் தகவல் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் விசாரித்ததில், அந்த தம்பதி, பணத்திற்காக குழந்தையை விற்றது தெரிய வந்தது.

    உடனே நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், விலைக்கு வாங்கியவரிடமிருந்து குழந்தையை மீட்டு, குழந்தையின் தாய் சதியை கைது செய்தனர்.

    ஆனால், ஜெய்தேவ் தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும், ஐபோன் வாங்கத்தான் குழந்தையை விற்றார்களா இந்த தம்பதி என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஒரு வேளை, 70,000 ரூபாய் மதிப்புள்ள அந்த ஐபோனை வாங்கத்தான், இந்த பெற்றோர்கள் குழந்தையை விற்றிருந்தால், இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென சமூக வலைத்தளத்தில் பலரும் சாடி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் பாஜக
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025