அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை
மே-25 முதல் மே-28 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே-29 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30-40 கிமீ வேகத்தில்) லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கை மே-25 முதல 29 வரை: மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோரம், குமரிக்கடல், கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.