அடுத்த செய்திக் கட்டுரை
வானிலை அறிக்கை: மார்ச் 13- மார்ச் 17
எழுதியவர்
Sindhuja SM
Mar 13, 2023
02:05 pm
செய்தி முன்னோட்டம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 13-14ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 15ஆம் தேதி, கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மார்ச் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பதிவான வெப்பநிலைகள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 13, 2023