Page Loader
வானிலை அறிக்கை: பிப்ரவரி 21- பிப்ரவரி 25
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை

வானிலை அறிக்கை: பிப்ரவரி 21- பிப்ரவரி 25

எழுதியவர் Sindhuja SM
Feb 21, 2023
02:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் 25ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் இயல்பை விட மிக அதிகமான வெப்பநிலை ஈரோட்டில்(36.2 டிகிரி செல்சியஸ்) பதிவாகி இருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழகத்தில் அதிக வெப்பநிலை பதிவான இடங்களின் விவரம்