Page Loader
மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
வஜிராபாத் குளத்தில் அம்மோனியாவின் அளவு தற்போது 8 PPMஆக இருக்கிறது.

மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு

எழுதியவர் Sindhuja SM
Apr 04, 2023
01:40 pm

செய்தி முன்னோட்டம்

யமுனை நதியில் நீர் மட்டம் குறைந்தது காரணமாக தேசிய தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் நெருக்கடி, அம்மோனியா உள்ளிட்ட அதிக அளவு மாசுகளால் மேலும் அதிகரித்துள்ளது. நகரின் பெரிய பகுதிகளுக்கு தண்ணீரை பம்ப் செய்யும் வஜிராபாத் மற்றும் சந்திரவால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி தண்ணீர் போர்டு(DJB) ஒரு அறிக்கையில், நிலைமை சீராகும் வரை தேசிய தலைநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. வஜிராபாத் குளத்தில் அம்மோனியாவின் அளவு தற்போது 8 PPMஆக இருக்கிறது. ஆனால், இந்திய தரநிலைகள் பணியகம்(BSI) நிர்ணயித்த ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச வரம்பு 0.5 PPM மட்டுமே.

இந்தியா

நீர் உற்பத்தி 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது

மேலும், ​​0.9 ppm அளவிலான அமோனியாவை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் DJBக்கு உள்ளது. "வஜிராபாத் குளத்தில் அதிக அளவு மாசுகள் (அம்மோனியா 8 ppmக்கு மேல்) இருப்பதால், வஜிராபாத் மற்றும் சந்திராவால் WTPகளில் இருந்து நீர் உற்பத்தி 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, திங்கள்கிழமை மாலை முதல் நிலைமை சீராகும் வரை குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்" என்று DJB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொண்டு, அதை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு DJB அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், தண்ணீர் தொடர்பான பிரச்னைகளுக்கு 1916/23527679/23634469 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.