NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
    வஜிராபாத் குளத்தில் அம்மோனியாவின் அளவு தற்போது 8 PPMஆக இருக்கிறது.

    மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 04, 2023
    01:40 pm

    செய்தி முன்னோட்டம்

    யமுனை நதியில் நீர் மட்டம் குறைந்தது காரணமாக தேசிய தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் நெருக்கடி, அம்மோனியா உள்ளிட்ட அதிக அளவு மாசுகளால் மேலும் அதிகரித்துள்ளது.

    நகரின் பெரிய பகுதிகளுக்கு தண்ணீரை பம்ப் செய்யும் வஜிராபாத் மற்றும் சந்திரவால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி தண்ணீர் போர்டு(DJB) ஒரு அறிக்கையில், நிலைமை சீராகும் வரை தேசிய தலைநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

    வஜிராபாத் குளத்தில் அம்மோனியாவின் அளவு தற்போது 8 PPMஆக இருக்கிறது.

    ஆனால், இந்திய தரநிலைகள் பணியகம்(BSI) நிர்ணயித்த ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச வரம்பு 0.5 PPM மட்டுமே.

    இந்தியா

    நீர் உற்பத்தி 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது

    மேலும், ​​0.9 ppm அளவிலான அமோனியாவை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் DJBக்கு உள்ளது.

    "வஜிராபாத் குளத்தில் அதிக அளவு மாசுகள் (அம்மோனியா 8 ppmக்கு மேல்) இருப்பதால், வஜிராபாத் மற்றும் சந்திராவால் WTPகளில் இருந்து நீர் உற்பத்தி 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, திங்கள்கிழமை மாலை முதல் நிலைமை சீராகும் வரை குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்" என்று DJB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொண்டு, அதை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு DJB அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும், தண்ணீர் தொடர்பான பிரச்னைகளுக்கு 1916/23527679/23634469 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி

    சமீபத்திய

    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்

    இந்தியா

    ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி ஸ்விக்கி
    பல டிஜிட்டல் நவீன வசதிகளுடன் வெளியான Odysse Vader மின்சார பைக்! எலக்ட்ரிக் வாகனங்கள்
    நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை துன்புறுத்தி கத்தியால் குத்திய ரிசார்ட் ஊழியர் கோவா
    ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு பெங்களூர்

    டெல்லி

    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு' இந்தியா
    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி இந்தியா
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து மதுரை
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி நிதியமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025