NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
    மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 04, 2023
    01:40 pm
    மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
    வஜிராபாத் குளத்தில் அம்மோனியாவின் அளவு தற்போது 8 PPMஆக இருக்கிறது.

    யமுனை நதியில் நீர் மட்டம் குறைந்தது காரணமாக தேசிய தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் நெருக்கடி, அம்மோனியா உள்ளிட்ட அதிக அளவு மாசுகளால் மேலும் அதிகரித்துள்ளது. நகரின் பெரிய பகுதிகளுக்கு தண்ணீரை பம்ப் செய்யும் வஜிராபாத் மற்றும் சந்திரவால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி தண்ணீர் போர்டு(DJB) ஒரு அறிக்கையில், நிலைமை சீராகும் வரை தேசிய தலைநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. வஜிராபாத் குளத்தில் அம்மோனியாவின் அளவு தற்போது 8 PPMஆக இருக்கிறது. ஆனால், இந்திய தரநிலைகள் பணியகம்(BSI) நிர்ணயித்த ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச வரம்பு 0.5 PPM மட்டுமே.

    2/2

    நீர் உற்பத்தி 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது

    மேலும், ​​0.9 ppm அளவிலான அமோனியாவை மட்டுமே சுத்திகரிக்கும் திறன் DJBக்கு உள்ளது. "வஜிராபாத் குளத்தில் அதிக அளவு மாசுகள் (அம்மோனியா 8 ppmக்கு மேல்) இருப்பதால், வஜிராபாத் மற்றும் சந்திராவால் WTPகளில் இருந்து நீர் உற்பத்தி 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, திங்கள்கிழமை மாலை முதல் நிலைமை சீராகும் வரை குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்" என்று DJB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொண்டு, அதை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு DJB அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், தண்ணீர் தொடர்பான பிரச்னைகளுக்கு 1916/23527679/23634469 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி

    இந்தியா

    இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா! சுற்றுலா
    தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி கொரோனா
    இன்று மஹாவீரர் ஜெயந்தி: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் திருவிழா
    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி

    டெல்லி

    புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு இந்தியா
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது ஆம் ஆத்மி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023