NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருமண-பலாத்கார வழக்கு: என்ன சொல்கிறது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருமண-பலாத்கார வழக்கு: என்ன சொல்கிறது மத்திய அரசு
    திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது தொடர்பான வழக்கு மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    திருமண-பலாத்கார வழக்கு: என்ன சொல்கிறது மத்திய அரசு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது தொடர்பான மனுக்கள் மீது மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜன:16) தெரிவித்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய திருமண பலாத்கார வழக்கின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தார்.

    இந்திய தலைமை நீதிபதி(சிஜேஐ) டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு அவர் அளித்த பதிலில், இந்த விவகாரத்தில் சட்டரீதியான பாதிப்புகள் மட்டுமின்றி சமூக பாதிப்புகளும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

    மேலும், இதே பிரச்சினையை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றத்திற்கும் இதே நிலைப்பாட்டை தான் மத்திய அரசு எடுத்ததாக கூறினார்.

    திருமண-பலாத்கார மனு

    வழக்கு மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    "இந்த விவகாரம் சமூக மாற்றங்களை உள்ளடக்கியது என்பதால், மாநிலங்களிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது" என்று உச்ச நீதிமன்றத்திற்கு மேத்தா பதிலத்திருக்கிறார்.

    மேலும் மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.

    பதில் மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 வரை கால அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    ராணுவத்தைப் பற்றி ட்வீட் செய்ததற்காக ஷெஹ்லா ரஷீத் மீது வழக்கு இந்தியா
    5G க்கான டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ 5G
    இந்தியாவின் பிருத்வி-II ஏவுகணை சோதனை வெற்றி இந்தியா
    காஷ்மீர் மக்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல: தேர்தல் தாமதம் குறித்து உமர் அப்துல்லா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025