NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது?
    இடம்புரி விநாயகரை வழிபட்டால் தடைகள் எல்லாம் நீங்கும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 17, 2023
    11:06 am

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் நாளை(செப்டம்பர்-18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    அதை முன்னிட்டு, இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகரின் வித்தியாசத்தை இப்போது பார்க்கலாம்.

    விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக சுழிந்திருந்தால் அவரை வலம்புரி விநாயகர் என்று அழைக்கிறோம். அவரது தும்பிக்கை இடது பக்கமாக சுழிந்திருந்தால் இடம்புரி விநாயகர் என்று அழைக்கிறோம்.

    இதுபோக, நேராக தும்பிக்கை கொண்ட விநாயகர் சிலைகளும் உள்ளன. இப்படிப்பட்ட சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

    ஆனால், வலம்புரி விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவது ஏற்றதல்ல. கோவில்களிலும் சில கோவில்களில் மட்டுமே நம்மால் வலம்புரி விநாயகரை வழிபட முடியும்.

    வலம்புரி விநாயகர் காட்சிதரும் கோவில்கள்--பிள்ளையார்பட்டி, செவல்பட்டி, செட்டிநாடு கோவில்கள், குடைவரைகோட்டை, மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவலஞ்சுழி, மும்பை சித்திவிநாயகர் கோவில்.

    டக்ம்வ்ல்

    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகரை வணங்கினால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

    பொதுவாக, வலம்புரி விநாயகரை வணங்கினால் வேண்டிய வரம் எல்லாம் கிடைக்கும் என்றும் இடம்புரி விநாயகரை வணங்கினால் இடர் எல்லாம் தீரும் என்றும் கருதப்படுகிறது.

    நாட்டில் உள்ள பெரும்பாலான கோவிகளில் விநாயகர் இடம்புரி விநாயகராகவே காட்சி தருகிறார்.

    பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகராகவும் இடம்புரி விநாயகரே இருக்கிறார்.

    இடம்புரி விநாயகரை வழிபட்டால் தடைகள் எல்லாம் நீங்கும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

    இது தவிர, இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் அருள்புரியக்கூடிய கோவில்களும் சில உள்ளன.

    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் காட்சிதரும் கோவில்கள்-- பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், திருவலாங்காடு கோவில்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விநாயகர் சதுர்த்தி

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  தமிழக அரசு
    பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது  சிவகங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025