NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்
    இந்தியா

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்

    எழுதியவர் Sindhuja SM
    February 18, 2023 | 03:14 pm 0 நிமிட வாசிப்பு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்
    ஆசிரம உரிமையாளர் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு இல்லத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரம வாசிகளில் பலர் காணாமல் போயுள்ளனர் என்ற புகார்களையும் சிபிசிஐடி விசாரிக்க உள்ளது. ஆசிரம உரிமையாளர் ஜூபின் பேபி (45), கேரளாவைச் சேர்ந்த அவரது மனைவி மரியா (43) மற்றும் அவர்களது கூட்டாளிகளை கற்பழிப்பு மற்றும் தாக்குதலுக்கான குற்றச்சாட்டின் கீழ் உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். நல்ல சமரியார் அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆசிரமம், விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்ற பெண்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் இல்லமாக உரிமம் இல்லாமல் 2005 முதல் செயல்பட்டு வருகிறது.

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தை சுற்றியுள்ள மர்மம்

    சில மாத "சிகிச்சை"க்குப் பிறகு, பெண்கள் உட்பட, ஆசிரமத்தில் வசித்த பலரை கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள அசிரமங்களுக்கு அனுப்பிவிட்டதாக அந்த ஆசிரம உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களை காணவில்லை என்று பலர் புகார் அளித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. பெங்களூருவில் உள்ள நியூ ஏஆர்கே மிஷன் ஆப் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட 15 பேர், குளியலறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற பல மர்மங்கள் அந்த ஆசிரமத்தில் நடந்துள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    விழுப்புரம்
    சிபிசிஐடி

    தமிழ்நாடு

    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 18- பிப்ரவரி 22 வானிலை அறிக்கை
    மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம் இந்தியா
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை

    விழுப்புரம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் மனித உரிமைகள் ஆணையம்

    சிபிசிஐடி

    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023