NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம் 
    ஒரு மாபெரும் இனக் கலவரம் அம்மாநிலத்தில் வெடித்தது.

    மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2023
    07:48 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000-4,000 தற்காலிக வீடுகளை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    தற்போது நிவாரண முகாம்களில் இருக்கும் மக்களை தற்காலிகமாக நகர்த்துவதற்கு 3,000-4,000 வீடுகளை கட்ட தனது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

    "நான் சில நிவாரண முகாம்களுக்குச் சென்றேன். அங்கு மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அரசாங்கம் சிறந்த வகையில் உதவ முயற்சிக்கிறது. அங்கிருக்கும் மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ரெடிமேட் வீடுகளை மாநில அரசு கட்டித்தர உள்ளது. நாடாளுமன்றத்தில் தீர்வு கண்ட பிறகு, அவர்களை அவர்களது சொந்த வீட்டுக்கு மாற்ற வேண்டும். சுமார் 3,000-4,000 தற்காலிக வீடுகள் கட்டப்படும்" என்று மணிப்பூர் முதலமைச்சர் கூறியுள்ளார்.

    கிட்ஸ்

    இரண்டு மாதங்களில் மக்கள் தற்காலிக வீடுகளுக்கு மாற்றப்படுவார்கள் 

    "இரண்டு மாதங்களுக்குள் நிவாரண முகாம்களில் உள்ளவர்களை தற்காலிக வீடுகளுக்கு மாற்றுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    மணிப்பூர் மாநிலத்தின் மக்கள்தொகையில் 53% பேர் மெய்த்தே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இவர்களை தவிர 33 பழங்குடியின மக்களும் அம்மாநிலத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மெய்த்தே சமூகத்தையும் ST பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியை கடந்த மே 3ஆம் தேதி நடத்தினர்.

    இதனை அடுத்து, ஒரு பெரும் இனக் கலவரம் அம்மாநிலத்தில் வெடித்தது.

    இப்போது வரை தொடரும் இந்த வன்முறையால் இதுவரை 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மணிப்பூர்
    கலவரம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  கர்நாடகா
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    அரபிக்கடலில் நீண்ட காலம் நிலைகொண்டிருக்கும் புயல் என்ற பெயரை பெற்றது 'பிபர்ஜாய்' வானிலை ஆய்வு மையம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 15 தங்கம் வெள்ளி விலை

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மத்திய அரசு

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025