NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு 
    வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு

    வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 05, 2023
    07:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை, வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வழக்கினை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது.

    இதனிடையே தற்போது விசாரணை நடத்தியவர்களிடம் இருந்து ரத்தமாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் முதற்கட்டமாக வேங்கைவயல் இடையூர் பகுதியில் உள்ள 11 பேரிடம் டி.என்.ஏ.பரிசோதனை மேற்கொள்ள காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது.

    அதில் 3 பேர்களின் ரத்தமாதிரிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடுத்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    மீதமுள்ள 8 பேர் ரத்தமாதிரிகளை தரமறுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குப்பதிவும் செய்ததாக தெரிகிறது.

    இந்த வழக்கின் விசாரணையில் டி.என்.ஏ.பரிசோதனை என்பது மிக அவசியம் என்று சிபிசிஐடி வாதிட்டுள்ளது.

    வழக்கு 

    மறுப்பு தெரிவித்த 8 பேரும் புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு இன்று(ஜூலை.,5)காலை வருகை 

    அதனையடுத்து 8 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்க புதுக்கோட்டை நீதிமன்றம் மூலம் அனுமதி பெற சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    அதன்படி, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரியது.

    இதன்பேரில், புதுக்கோட்டை நீதிமன்றமும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின் பேரில், குறிப்பிட்ட அந்த 8 பேரும் புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு இன்று(ஜூலை.,5)காலை 11.30மணியளவில் போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டனர்.

    அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேங்கை வயல்
    சிபிசிஐடி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    வேங்கை வயல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் தமிழ்நாடு
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் ஸ்டாலின்
    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் இந்தியா
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் தமிழ்நாடு

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு

    காவல்துறை

    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடி ரகசிய விசாரணை திருநெல்வேலி
    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  இந்தியா
    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் இந்தியா

    காவல்துறை

    சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்  நாம் தமிழர்
    டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது  டெல்லி
    ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை  காவல்துறை
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025