NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் விவகாரம் - 4 சிறுவர்களின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கைவயல் விவகாரம் - 4 சிறுவர்களின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிப்பு 
    வேங்கைவயல் விவகாரம் - 4 சிறுவர்களின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிப்பு

    வேங்கைவயல் விவகாரம் - 4 சிறுவர்களின் ரத்த மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சேகரிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 21, 2023
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித கழிவுகள் கலந்த விவகாரம் குறித்து, தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை, சிபிசிஐடிக்கு பின்னர் மாற்றப்பட்டது.

    அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் நீரில் கலக்கப்பட்டது, 2 ஆண்கள் மற்றும் 1 பெண்ணின் மனித கழிவு என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, இறையூர், வேங்கைவயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 21 பேரிடம் இதுவரை டிஎன்ஏ பரிசோதனைக்காக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    ரத்தம் 

    சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னை அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு 

    இதனிடையே, வேங்கைவயல் கிராமத்தினை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் இறையூர் பகுதியினை சேர்ந்த 3 சிறுவர்கள் என மொத்தம் 4 சிறுவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கோரி, புதுக்கோட்டை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

    அதன் பேரில், இன்று(ஜூலை.,21) 4 சிறுவர்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்க முடிவு செய்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலக்குழுவினரின் வழிகாட்டுதல்படி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

    மேலும், சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேங்கை வயல்
    சிபிசிஐடி
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    வேங்கை வயல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் தமிழ்நாடு
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் ஸ்டாலின்
    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் இந்தியா
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் தமிழ்நாடு

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025