NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு
    சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு

    சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு

    எழுதியவர் Nivetha P
    Aug 01, 2023
    02:18 pm

    செய்தி முன்னோட்டம்

    வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதனால் இந்த ரயிலின் சேவையினை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை சென்ட்ரல்-மைசூரு, காசர்கோடு-திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல்-கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் தற்போது தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த 3 வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் சராசரியான டிக்கெட் முன்பதிவு 100%மேல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் சென்னை-திருநெல்வேலி மற்றும் சென்னை-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவையினை துவங்குமாறு கோரிக்கைகள் எழுந்தது.

    ஆனால் சென்னை-திருப்பதி ரயில் சேவைக்கு ரயில்வே வாரியத்தில் அனுமதி அளிக்காத காரணத்தினால், ரயில் சேவைக்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ரயில் சேவை

    ரயில் சேவைக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தகவல் 

    அதனை தொடர்ந்து சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் துவங்கப்படும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.

    இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர், "விரைவில் சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் துவங்கவுள்ளது. ஆனால் அதற்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

    மேலும், வந்தே பாரத் ரயிலினை பராமரிப்பதற்காக, மதுரை கோட்டம் திருநெல்வேலி பணிமனையில் பிட்லைன் அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து இந்த ரயில் சேவை வரும் 6ம் தேதி துவங்கவுள்ளது என்று வெளியான தகவலை தெற்கு ரயில்வே முற்றிலுமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    மத்திய அரசு

    சமீபத்திய

    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ஆட்டோமொபைல்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    மத்திய அரசு

    பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன? பான் கார்டு
    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  கனடா
    வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு செயற்கை நுண்ணறிவு
    மழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025