NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
    50,000 லட்டுகள் தயாரிக்கும் பணி

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2022
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சொர்க்கவாசல் திறக்கும் நாளன்று, பக்தர்கள் பகல் பத்து, ராப்பத்து விரதம் இருந்து பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதேசி வைபவம் தமிழகம் முழுக்க பெருமளவில் விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

    இந்நிலையில் இந்த வைபவத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் 2ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது.

    இதற்கான பணிகளை கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    50,000 லட்டுகள் தயாரிக்கும் பணியில் 25 பேர் ஈடுபாடு

    பொன்வரதராஜ கோயில்-32 ஆண்டுகளாக வைகுண்ட ஏகாதேசியன்று லட்டு பிரசாதம்

    அதன்படி, பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாளுக்கு அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படவுள்ளது.

    இந்நிகழ்வில் பங்கேற்று பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனகல்யாண சார்பில் 32வருடங்களாக லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து இந்தாண்டு வரும் பக்தர்களுக்கும் லட்டு வழங்க, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக 1000 கிலோ கடலைமாவு, 1000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்டவை 5 கிலோ, 1000 கிலோ கடலெண்ணெய் முதலியவை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியினை கோயில் நிர்வாகத்தை சேர்ந்த 25 பேர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்
    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்

    தமிழ்நாடு

    தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாரடைப்பு காரணமாக மரணம்-அதிர்ச்சியில் குடும்பத்தார் இந்தியா
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம் இந்தியா
    பள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி ஸ்டாலின்
    மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி வைரல் செய்தி

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025