NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
    இந்தியா

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2022, 06:32 pm 1 நிமிட வாசிப்பு
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
    50,000 லட்டுகள் தயாரிக்கும் பணி

    தமிழகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சொர்க்கவாசல் திறக்கும் நாளன்று, பக்தர்கள் பகல் பத்து, ராப்பத்து விரதம் இருந்து பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதேசி வைபவம் தமிழகம் முழுக்க பெருமளவில் விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இந்த வைபவத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் 2ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளை கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொன்வரதராஜ கோயில்-32 ஆண்டுகளாக வைகுண்ட ஏகாதேசியன்று லட்டு பிரசாதம்

    அதன்படி, பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாளுக்கு அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்று பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனகல்யாண சார்பில் 32வருடங்களாக லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்தாண்டு வரும் பக்தர்களுக்கும் லட்டு வழங்க, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 1000 கிலோ கடலைமாவு, 1000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்டவை 5 கிலோ, 1000 கிலோ கடலெண்ணெய் முதலியவை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியினை கோயில் நிர்வாகத்தை சேர்ந்த 25 பேர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்
    விமான பயணத்திற்கு முன்னர், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பயண குறிப்புகள்
    பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் ஈஸியாக கற்றுக்கொள்ளும் கெட்ட பழக்கங்கள் குழந்தை பராமரிப்பு
    புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்! ட்விட்டர்

    தமிழ்நாடு

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை

    தமிழ்நாடு செய்தி

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி
    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் திமுக
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை சென்னை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை விழுப்புரம்

    மாவட்ட செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் தமிழ்நாடு
    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023