NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்
    இந்தியா

    உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்

    உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்
    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023, 05:52 pm 0 நிமிட வாசிப்பு
    உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்
    உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்படும் திடீர் விரிசல்கள்

    உத்திரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் போன்ற நகரங்களில் கோயில், வீடு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரியளவிலான விரிசல்கள் திடீரென ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் பணியினை அம்மாநில அரசு தனி குழுக்களை அமைத்து மேற்கொண்டு வருகிறது. இந்த திடீர் விரிசல்கள் குறித்து இஸ்ரோ, ஐஐடி அமைப்புகளுடன் இணைந்து காரணங்களை ஆராய்ந்தும் வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, கட்டுமான பணிகளுக்கு அங்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விரிசல் கண்ட கட்டிடங்களை இடிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனினும், விரிசல் தொடர்ந்து பரவி வருவதால், இயற்கை பேரிடராக கூட இருக்கலாம் என கருதப்படுகிறது.

    பாதுகாப்பு கருதி தற்காலிகமாக வீரர்கள் வேறு இடத்தில் தங்க வைப்பு

    இது குறித்து, இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், உத்தரகாண்டின் ஜோஷிமத் பகுதியில் 25 முதல் 28 ராணுவ கட்டிடங்கள் உள்ளன. இதிலும் தற்போது விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி தற்காலிகமாக ராணுவ வீரர்கள் வேறு இடத்தில் தங்கியுள்ளார்கள். தேவைப்பட்டால் ஆலி நகரில் நிரந்தரமாக அவர்கள் தங்கவைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும், உத்தரகாண்டின் ஜோஷிமத் பைபாஸ் சாலை பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்கள பகுதிகளுக்கு செல்ல ராணுவ வீரர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்பதால்,அவர்கள் செயலாற்ற தயாராகவே உள்ளார்கள் என்று தலைமை தளபதி தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    இந்தியா

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023