NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம்
    குற்றத்தில் ஈடுபட்ட மூவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.(சித்தரிப்பு புகைப்படம்).

    உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம்

    எழுதியவர் Srinath r
    Dec 31, 2023
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்திரப்பிரதேசத்தில் பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக எண்ணெய் அலையில் பணியாற்றி வந்த 18 வயது தலித் சிறுமி, எண்ணெய் கொப்பரையில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாக்பத் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில், அந்த இளம்பெண் படுகாயமடைந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில், ஆலை உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று அந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனுரா சில்வர்நகர் கிராமத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் வேலை பார்த்து வந்ததாகவும்,

    அப்போது அவரது தங்கையிடம் ஆலை உரிமையாளர் பிரமோத் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜு மற்றும் சந்தீப் அத்துமீறியதாகவும், தங்கை மறுக்கவே அவரை ஜாதியை கூறித்திட்டி, எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    2nd card

    படுகாயம் அடைந்த இளம் பெண்

    டெல்லி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும்,

    அதை அப்பெண் தடுத்ததால், அவரின் ஜாதியை பயன்படுத்தி கடினமான வார்த்தைகளால் திட்டி, எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளி விட்டதாக தெரிவித்துள்ளார்.

    அந்தப்பெண்ணின் உடலில் பாதிக்கு மேல் தீக்காயங்கள் ஏற்பட்டு, கால்கள் மற்றும் கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் மூவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    "அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என வட்டார காவல் அதிகாரி விஜய் சவுத்ரி தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலியல் வன்கொடுமை
    உத்தரப்பிரதேசம்
    டெல்லி
    கைது

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    உத்தரப்பிரதேசம்

    'சனாதன தர்மம் மட்டுமே மதம், மற்றவை அனைத்தும் அதன் உட்பிரிவுகள்': யோகி ஆதித்யநாத் இந்தியா
    டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இந்தியா
    கோவில் கட்ட ரூ.11 லட்சத்தை வாரி வழங்கிய இந்திய இளம் கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணி
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி

    டெல்லி

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  ஆம் ஆத்மி
    டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் காங்கிரஸ்
    3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  காங்கிரஸ்
    சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள்  இந்தியா

    கைது

    சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது  காவல்துறை
    திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது தஞ்சாவூர்
    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை  சென்னை
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025