NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு 

    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2024
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு நபர் இன்று தனது முழு குடும்பத்தையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோவில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராம்பூர் மதுராவின் பலாபூர் கிராமத்தில் இந்த பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.

    தற்கொலை செய்திகொண்ட நபர் 42 வயதான அனுராக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    போதைப்பொருள் மற்றும் மனநலப் பிரச்சினைகளுடன் அவர் போராடி வந்ததாக கூறப்படுகிறது.

    காவல்துறையின் கூற்றுப்படி, அனுராக்கின் குடும்பத்தினர் அவரை போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப விரும்பியதால், அனுராக் அவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.

    சம்பவத்தன்று, அவரது குடும்பத்தினர் மறுவாழ்வு மையத்திற்கு அவரை அனுப்புவது குறித்து வலியுறுத்தியதால் சோகமடைந்த அனுராக் தனது குடும்பத்தினரை கொன்றிருக்கிறார்.

    இந்தியா 

     அப்பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு 

    தனது தாயார் சாவித்திரியை(65) சுட்டு கொன்ற அனுராக், தனது மனைவி பிரியங்காவை(40) சுத்தியலால் அடித்து கொன்றார்.

    பின்னர் அவர் தனது மூன்று குழந்தைகளை அவர்களின் வீட்டின் கூரையிலிருந்து தூக்கி எறிந்து, மூன்று பேரையும் கொன்றார்.

    "வழக்கின் அனைத்து அம்சங்களையும் போலீசார் மற்றும் தடயவியல் குழுக்கள் விசாரித்து வருகின்றன. விரிவான விசாரணை முடிந்த பிறகு வழக்கு பதிவு செய்யப்படும்" என்று இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி சக்ரேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

    தொடர்ந்து விசாரணையின் ஒரு பகுதியாக, தடயவியல் குழுக்கள் தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றன. அதே வேளையில், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அனுராக்கின் உடல் உட்பட அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
    வீடியோ: வாரணாசி ரோட்ஷோவின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற பிரதமர் மோடியின் வாகனங்கள்  பிரதமர் மோடி
    "மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
    மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு

    கொலை

    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை டெல்லி
    ஜார்ஜ் ஃப்லாய்ட்டை கொன்ற குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற முன்னாள் காவல் அதிகாரி, கத்தியால் குத்தப்பட்டார் அமெரிக்கா

    காவல்துறை

    சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி  சேலம்
    மும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்  மும்பை
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்
    வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு  தமிழ்நாடு

    காவல்துறை

    சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி  சென்னை
    சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை சேலம்
    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை தமிழக காவல்துறை
    தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025