NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி 
    மக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

    மக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி 

    எழுதியவர் Nivetha P
    May 12, 2023
    06:39 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் திட்டத்தின் கீழ், பீகார் மாநில மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை கிண்டி ராஜபவனில் இன்று(மே.,12) கலந்துரையாடினார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தனித்தனியாக மொழியினை வைத்து பிரிந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னர் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.

    அதன் பின் நடந்த அரசியல் மாற்றத்தால் நாம் தனித்தனியாக மொழியை வைத்து பிரிந்துள்ளோம்.

    தற்போது மக்கள் மத்தியில் ஒற்றுமை குறைந்து வருகிறது என்று பேசியுள்ளார்.

    மேலும் தனக்கு நேர்ந்தது ஒரு குழந்தை திருமணம் என்று கூறிய அவர், தன் வாழ்வில் தூண்போல தனது மனைவி பக்கபலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆளுநர் 

    நான் ஆளுநர் பதவிக்கு விரும்பி வரவில்லை - ஆர்.என்.ரவி 

    அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் குழந்தை திருமணத்தினை ஆதரிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்து அமைந்துள்ளது.

    இதனையடுத்து தமிழ்நாட்டில் எந்த இடம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டதற்கு, தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் மக்கள் மிகவும் அன்பாக பழகுவார்கள்.

    இங்கு இருக்கும் இட்லி, தோசை மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

    பின்னர், நான் எனது சிறு வயதில் சரியான சாலை வசதி கூட இல்லாத காலத்தில் 8 கிமீ தூரம் பள்ளிக்கு நடந்தே சென்றேன்.

    நான் ஆளுநர் பதவிக்கு விரும்பி வரவில்லை. இதனை ஒரு கடமையாக கருதி மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    சென்னை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  ரயில்கள்
    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025