NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்; இப்படியொரு பின்னணியா?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்; இப்படியொரு பின்னணியா?
    பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்

    பல ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்க்கும் தமிழக கிராமங்கள்; இப்படியொரு பின்னணியா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 14, 2025
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சூரியன், கால்நடைகள் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாடப்படும் அதே வேளையில், தமிழகத்தில் உள்ள சில கிராமங்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

    நாமக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் கடந்த கால சம்பவங்களுடன் பிணைந்துள்ள தனித்துவமான உள்ளூர் நம்பிக்கைகளால் பல தசாப்தங்களாக பொங்கலை கொண்டாடாமல் இருந்து வரும் நிலையில், அதன் சுவாரஸ்ய பின்னணியை இதில் தெரிந்து கொள்ளலாம்.

    பொங்கல்

    பொங்கலைத் தவிர்க்கும் கிராமங்கள் 

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் உள்ள அத்தனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டு வருகிறது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நில உரிமையாளர் பெரும் பொங்கல் பண்டிகையை ஏற்பாடு செய்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து பெரியம்மை பரவியதால் இப்பகுதியில் மக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டன.

    தெய்வீக வழிகாட்டுதலைக் கோரி, உள்ளூர் மக்கள் கிராம அம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.

    அங்கு பொங்கல் கொண்டாடுவது பாதிப்புக்கு வழிவகுத்தது என்று தெய்வ அருள் வாக்கு சொன்னதாக நம்பப்படுகிறது.

    அன்றிலிருந்து, கிராம மக்கள் தங்கள் கூட்டு நல்வாழ்வை உறுதி செய்ய பொங்கல் திருவிழாவை கொண்டாடுவதை நிறுத்திவிட்டனர்.

    சிங்கிலிப்பட்டி

    சிங்கிலிப்பட்டியில் பொங்கலை தவிர்ப்பதன் காரணம்

    இதேபோல், நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தெற்கே உள்ள அழகிய கிராமமான சிங்கிலிப்பட்டியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடப்படவில்லை.

    பொங்கல் பிரார்த்தனைக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தை நாய் ஒன்று தின்ற சம்பவத்தை கிராம மக்கள் தீய சகுனமாக கருதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் திருவிழா கொண்டாட்டங்களின்போதும் விவரிக்க முடியாத வகையில் கால்நடைகள் இறந்தன.

    மேலும் பேரிடர்களுக்கு பயந்து, சமூகம் கூட்டாக கொண்டாட்டத்தை முற்றிலும் கைவிட முடிவு செய்தது.

    கேளையாப்பிள்ளையூர்

    தென்காசி மாவட்டத்தில் உள்ள கேளையாப்பிள்ளையூர்

    தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையே அருகே உள்ள கேளையாப்பிள்ளையூர் என்ற கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைத்தபோது பானையில் நுரை பொங்கி வராமல் முன் கூட்டியே உலை கொதித்ததாக கூறப்படுகிறது.

    பானையில் முதலில் நுரைத் தள்ளி பொங்கினால் தான் அந்த பொங்கலை போல் மக்களின் வாழ்க்கையும் இன்பத்தில் பொங்கி செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை எனும் நிலையில் இது அபசகுணமாக பார்க்கப்பட்டது.

    மேலும், அங்குள்ள உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் தை மாத திருவிழா நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைக்காமல் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்ததன் காரணமாக தான் இது போன்ற அபசகுணம் ஏற்பட்டதாகவும் ஊர்மக்கள் நம்புவதால், அப்போதிருந்து பொங்கல் கொண்டாடுவதில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொங்கல் திருநாள்
    பொங்கல்
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பொங்கல் திருநாள்

    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல் தமிழ்நாடு
    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை தமிழ்நாடு
    பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம் பொங்கல்

    பொங்கல்

    அயலானுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்- படக்குழு வெளியிட்ட அப்டேட் சிவகார்த்திகேயன்
    'அயலான்' திரைப்படத்தின் 2வது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது  சிவகார்த்திகேயன்
    பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு சென்னை
    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் - ஏலியன் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் சிவகார்த்திகேயன் கிறிஸ்துமஸ்

    தமிழகம்

    தமிழக அரசு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது பொங்கல் பரிசு
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தமிழகம் வருகை அண்ணா பல்கலைக்கழகம்
    2025 பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1,000 இல்லாதது ஏன்? தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் பொங்கல் பரிசு

    தமிழ்நாடு

    பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல்; தனி அலுவலகம் அமைத்தார் அன்புமணி அன்புமணி ராமதாஸ்
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000; தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    சென்னை பரங்கிமலை ரயில் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு; முழு தண்டனை விபரங்கள் மரண தண்டனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025