NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது 
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது

    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Jun 12, 2023
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் அவில்தாரராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன்.

    இவரது மனைவி கீர்த்தி திருவண்ணாமலை கலசப்பாக்கம் படவேடு-ரேணுகாம்பாள் கோயில் அருகேயுள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மளிகைக்கடை ஒன்றினை நடத்திவந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் பிரபாகரன் அண்மையில் ஒரு வீடியோ பதிவினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

    அதில், தனது மனைவி நடத்திவரும் கடையில் சில மர்மநபர்கள் நுழைந்து நிலப்பிரச்சனை காரணமாக கடையினை அடித்து நொறுக்கியதோடு, 120க்கும் மேற்பட்டவர்கள் தனது மனைவியினை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.

    மேலும், தனது மனைவி மற்றும் குடும்பத்தாரை காப்பாற்றும்படியும், தனது மனைவி இதுகுறித்து அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

    இந்த வீடியோ வைரலானநிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    நடவடிக்கை 

    தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் கைது 

    இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை சந்தவாசல் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    அதன்படி,சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கீர்த்தி அளித்த புகாரின்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் என்னும் ஹரிதாஸ் மற்றும் செல்வராஜ் என்னும் 2 நபரை கைது செய்துள்ளனர்.

    இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட கீர்த்தி தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் தங்கள் விசாரணையினை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    மேலும் வீடியோ வெளியிட்டுள்ள பிரபாகரன், "ராணுவ அதிகாரியான நான் தலை வணங்க கூடாது.

    எனினும், எனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக மண்டியிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது எனக்கு அவமானமாக உள்ளது" என்று கண்கலங்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    காவல்துறை
    காவல்துறை
    திருவண்ணாமலை

    சமீபத்திய

    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் பாரத் ஜோடோ யாத்ரா
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா

    காவல்துறை

    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்

    காவல்துறை

    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை
    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  தமிழ்நாடு
    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்த்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025